விராட் கோலி குறித்து சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா பரபரப்பான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திர வீரராக இருந்து வரும் விராட் கோலி மீது சில வாரங்களுக்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா சில முக்கியமான விமர்சனங்களை முன்வைத்தார். அது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக சென்று பலராலும் விவாதிக்கப்பட்டது.
பணம் பதவி விராட் கோலியை மாற்றிவிட்டது
அந்தக் குறிப்பிட்ட பேட்டியில் பேசியிருந்த அமித் மிஸ்ரா கூறும் பொழுது விராட் கோலி ஆரம்ப காலத்தில் சமோசாக்களை விரும்பி உண்ணும் பொழுதே அவருடன் தனக்கு மிகவும் நெருக்கமான நட்பு இருந்ததாக கூறியிருந்தார். அவ்வளவு இளம் வயதிலேயே அவரைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்று இருந்தார்.
அதே சமயத்தில் தற்பொழுது பணம் மற்றும் பதவி என வந்த பிறகு விராட் கோலி மாறிவிட்டதாகவும், அவருடன் முன்பு போல சகஜமாக பேச முடிவதில்லை எனவும், அப்படி சென்று பேசினால் ஏதோ ஆதாயத்திற்காக வருகிறார்கள் என்று நினைத்து விடுவார்கள் என்றும் கூறியிருந்தால். மேலும் ரோகித் சர்மா உடன் அப்படி எதுவும் யோசிக்காமல் எப்பொழுதும் போல் விளையாடி பேசிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
நல்ல உணவு ஆர்டர் செய்யலாமா?
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பியூஸ் சாவ்லா கூறும் பொழுது “அமித் மிஸ்ரா எனக்கு மிகவும் மூத்தவர். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும் விளையாடிய விதத்தில் பந்து வீசிய விதத்தில் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். அவர் விராட் கோலி பற்றி பேசிய வீடியோவை பார்த்தேன். ஆனால் நான் விராட் கோலி உடன் விளையாடிய காலங்களில் எல்லாமே எனக்கு நல்ல அனுபவமாகவே இருக்கிறது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை செயல்முறை இருக்கிறது. நானும் விராட் கோலியும் இப்பொழுதும் நன்றாகவே பழகிக் கொள்கிறோம். நாங்கள் ஜூனியர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடினோம். பிறகு இந்திய அணிக்கு விளையாடினோம். அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடினோம். இப்படி எல்லா நிலைகளிலுமே எனக்கும் அவருக்குமான நட்பு நல்ல முறையில் இருந்திருக்கிறது.
இதையும் படிங்க : நான் இல்லை.. உலகின் பெஸ்ட் 3 விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – கில்கிறிஸ்ட் தேர்வு
மேலும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போது பவுண்டரி எல்லையில் நான் கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு பீல்டிங் நின்றிருந்த விராட் கோலி என்னிடம் ‘பியூஸ் ஏதாவது நல்லதை ஆர்டர் செய்வோம்’ என்று கூறினார்.அவர் என்னுடன் சேர்ந்து சாப்பிட விரும்பினார். இப்பொழுதும் கூட நாங்கள் 10, 15 ஆண்டுகள் கடந்த விஷயங்கள் குறித்து பேசிக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.