ஐபிஎல் தொடரின் மூத்த வீரரான பியூஸ் சாவ்லா கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தமாக ஐபிஎல் தொடரில் அவர் நான்கு அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் பியூஸ் சாவ்லா தான் விளையாடிய நான்கு அணிகளில் தனக்கு விருப்பமான அணிகளை தரவரிசைப் படுத்தி இருக்கிறார்.
பியூஸ் சாவ்லாவின் ஐபிஎல் பயணம் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக துவங்கியது. யுவராஜ் சிங் தலைமையில் விளையாடிய பியூஸ்சாவ்லா அந்த ஆண்டு பஞ்சாப் அணி அரை இறுதி வரை செல்ல முக்கிய காரணமாக அமைந்தார். அதற்குப் பிறகு 2014ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார்.
அந்த ஆண்டு இரண்டாவது முறையாக கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். மேலும் அதற்குப் பிறகு 2020ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஒப்பந்தமானார். ஒரே ஒரு ஆண்டு மட்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ள நிலையில், கழட்டி விடப்பட்ட அவர் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முக்கிய பந்துவீச்சாளராக மாறினார்.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் விளையாடிய நான்கு அணிகளில் தனக்கு விருப்பமான அணியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதலிடத்தையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை பஞ்சாப் அணிக்குகொடுத்தார். இதனால் நான்காவது அணியாக சென்னை அணி அவர் தேர்வு செய்யவில்லை என்றாலும் நான்காவது அணியாக சிஎஸ்கே அமைந்திருக்கிறது.
இந்த தரவரிசை குறித்து அவர் விளக்கும்போது “இந்த நான்கு அணிகளில் நான் யாரையுமே நேர்மையாக தேர்வு செய்ய முடியாது. நான் அவர்களை வரிசைப்படுத்தினால் அது இவ்வாறுதான் அமையும். முதல் இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், இரண்டாவது இடத்தை கொல்கத்தா அணிக்கும், மூன்றாவது இடத்தை பஞ்சாப் அணிக்கும் கொடுக்கிறேன். நான் சென்னை அணியோடு விளையாடிய சமயத்தில் கொரோனா காலகட்டம் என்பதால் நாங்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டியதாயிற்று.
இதையும் படிங்க:இங்கிலாந்து அணியில் இந்திய முன்னாள் வீரரின் மகன்.. இலங்கை போட்டியில் மாற்று வீரர்
அதனால் ஹோட்டல் ரூம்களிலேயே அதிக நேரத்தை செலவிட்டோம். அதன் காரணமாக எனக்கு சென்னை அணியின் ட்ரெஸ்ஸிங் சிங் ரூம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. நான் மும்பை அணிக்குச் சென்று விளையாடிய போது எனக்கு ரோகித் சர்மா உடன் நல்ல உடன்பாடு இருந்தது. என்னைப் பொறுத்தவரை வீரர்களை நடத்தும் விதத்தில் மும்பை அணிக்குதான் நம்பர் ஒன் இடம்” என்று கூறி இருக்கிறார்.