இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், அடுத்ததாக இதே அணிக்கு எதிராக டி20 போட்டியில் களம் இறங்க உள்ளது. டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணி தற்போது பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் பேட்ஸ்மேன் ஆன தினேஷ் கார்த்திக், வங்கதேசம் அணிக்கு எதிராக தேர்வாகி இருக்கும் இளம் இந்திய வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இந்திய அணிக்கு அடுத்து வருகிற மூன்று மாதங்களும் நீண்ட நெடிய டெஸ்ட் தொடர் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளும், அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முக்கியமாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி இருக்கிறது. எனவே பிசிசிஐ வேகப்பந்துவீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தும் நோக்கில் மூத்த பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
எனது வங்கதேசம் அணிக்கு எதிரான தொடருக்கு ஐபிஎல் தொடரில் தனது புயல் வேகப்பந்துவீச்சால் கலக்கிய மயங்க் யாதவ் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இருப்பினும் காயம் அவருக்கு குறிப்பிடத்தக்க பிரச்சனையாக இருந்து வரும் சூழ்நிலையில் என்சிஏவில் சிறப்பான பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அணியில் இடம் பிடித்து விளையாட தயாராக இருக்கிறார். இந்த நிலையில் மயங்க் யாதவ் தேர்வு செய்யப்பட்டதற்கு இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது “மயங்க் யாதவ் இந்த முறை 157 கிலோ மீட்டர் வேகத்தில் வேகமாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். இதற்காகவே தனது உடலை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு லம்போர்கினி கார் போன்றவர். நீங்கள் ஒரு முறை பெடலை அடித்தால், அவர் புயல் வேகத்தில் செயல்படுவார். அவர் ஃபிட்னஸில் சிறப்பாக இருந்தால் புயல் வேகத்தில் பந்துகளை பறக்க விடுவார்” என்று கூறி இருக்கிறார்.
இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக களம் இறங்கிய மயங்க் யாதவ் தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த முறை பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதையும் படிங்க:195 ரன்.. அயர்லாந்து வீரர் அதிரடி சதம்.. தென் ஆப்பிரிக்கா தோல்வி.. தொடரையும் வெல்ல முடியாத பரிதாபம்
சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில் காயம் காரணமாக வெளியேறியதால் அதன் பிறகு அந்த சீசன் முழுவதும்அவர் விளையாடவில்லை. தற்போது மீண்டும் தயாராக இருக்கும் அவர் வங்கதேச அணிக்கு எதிராக தனது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.