இந்திய அணி இவ்வளவு அடி வாங்க காரணம்.. அந்த ஒரு வீரர் இல்லாததுதான்.. தினேஷ் கார்த்திக் வருத்தமான பேட்டி

0
4662

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தினார். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் டீன் எல்கர் 140 ரன்களுடனும், யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 8 ரன்கள் முன்னிலை பெற்று, 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணி தரப்பில் பும்ரா மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்னா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்த போட்டியை பொறுத்தவரை இந்திய அணி தரப்பில் ஆல்ரவுண்டர் ஜடேஜா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை இந்திய அணி மிஸ் செய்து வருவதாக ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் மற்றும் அஸ்வின் இருவருக்குமே பவுலிங் சுத்தமாக எடுக்கவில்லை. இதுகுறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசும் போது, சென்சுரியன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முகமது ஷமியை அதிகமாக மிஸ் செய்கிறது. பவுலிங் படைக்கு ஒரு தலைவனாக முகமது ஷமி செயல்படுவார். பும்ராவுக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருப்பார்.

இந்த பிட்ச் பந்தின் சீம் பகுதியை பிடித்து வீசும் பவுலர்களுக்கு சாதகமானது என்பதை போல் தெரிகிறது. அவர் இருந்திருந்தால் நிச்சயம் முகமது ஷமி சில விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருப்பார். இந்திய அணி அவரை அதிகமாக மிஸ் செய்கிறது என்பது உறுதி. ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளனர்.

- Advertisement -

இன்னொரு பக்கம் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் 31 ஓவர்கள் வீசி 111 ரன்களை தான் விட்டுக் கொடுத்துள்ளனர். சிராஜும் கொஞ்சம் ரன்களை வாரி வழங்கியிருந்தாலும், அவரால் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் வீச முடிந்துள்ளது. ஒவ்வொரு பந்தை வீசும் போது சிராஜ் அல்லது பும்ரா ஆகியோர் விக்கெட்டுக்கு அருகில் சென்று வருகின்றனர். அதுபோன்ற உணர்வை களத்தில் அளிக்கிறார்கள்.

ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பதை போல் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியது குறிப்பிடத்தக்கது.