நாங்க தவறு செஞ்சோம் செய்வோம்.. ஆனா சூரியவன்சி மாதிரி சிஎஸ்கேவுக்கு கொண்டு வருவோம் – மைக் ஹசி பேட்டி

0
119
Hussey

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி இளம் திறமைகளை கண்டறிந்து உருவாக்க வேண்டிய அவசியத்தை பேசி இருக்கிறார்.

தற்போது சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு 99 சதவீதம் இல்லை என்று கூறலாம். எனவே அந்த அணிக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதே சமயத்தில் முன்பிருந்த அழுத்தம் இப்பொழுது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிஎஸ்கே அணி மீதான குற்றச்சாட்டு

ஐபிஎல் தொடரில் இருக்கும் சிஎஸ்கே தவிர மற்ற ஒன்பது அணிகளும் இளம் வீரர்கள் மீது முதலீடு செய்து அவர்களை சில பல ஆண்டுகள் வைத்து வளர்க்கின்றன. மும்பை மாதிரியான அணி எடுத்ததும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை சூப்பர் ஸ்டார் ஆக உருவாக்குகிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கூட இதை செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெறும் 14 வயதான சிறுவனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாய்ப்பை நம்பி கொடுத்தது. அதை பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுவன் சூரியவன்சி வெறும் 35 பந்தில் அதிரடி சதம் அடித்து உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். எனவே சிஎஸ்கே இனிமேலாவது திருந்தி இளம் திறமைகளைக் கண்டறிந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சொந்த அணியின் ரசிகர்களே விமர்சனம் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

நாங்கள் தவறு செய்து விட்டோம்

இதுகுறித்து மைக் ஹசி பேசும் பொழுது “நாங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதியாக இளம் திறமைகளை கண்டறிந்து வளர்க்க வேண்டிய அம்சம் இருக்கிறது. நாங்கள் பல்வேறு நிலைகளில் இளம் வீரர்களுடன் பயிற்சிகள் மேற்கொண்டு இருக்கிறோம். மேலும் அவர்கள் ஏலத்திற்கு வரும் பொழுது நாங்கள் பார்க்கிறோம் ஆனால் எங்களால் வாங்க முடியவில்லை”

“இனி அப்படி இல்லாமல் இளம் வீரர்களுடன் நாங்கள் பயிற்சி போட்டிகளில் விளையாட வேண்டும். அந்த வீரர்களை நாங்கள் அழுத்தத்தில் வைக்க வேண்டும். அப்பொழுது அவர்கள் எவ்வளவு திறமையுடன் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் கண்டறிந்து கொள்ள முடியும்”

இதையும் படிங்க : நடு மைதானத்தில் ரிங்கு சிங் கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. வீரர்கள் ரசிகர்கள் கோபம்.. என்ன நடந்தது?

“நாங்கள் அணி கலவையில் இனியும் தவறு செய்யப் போகிறோம். ஆனால் நாங்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்து எங்களிடம் அவர்களின் திறமை குறித்த தகவல்கள் இருந்தால், நாங்கள் சிஎஸ்கே அணியை மேற்கொண்டு முன்னேற்றிச் செல்ல முடியும். நிச்சயமாக வருங்காலங்களில் நாங்கள் இளம் திறமைகளை கண்டறிந்து அணிக்குள் கொண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -