நடு மைதானத்தில் ரிங்கு சிங் கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. வீரர்கள் ரசிகர்கள் கோபம்.. என்ன நடந்தது?

0
334
Kuldeep

நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் குல்தீப் யாதவ் ரிங்கு சிங் கன்னத்தில் இரண்டு முறை அறைந்தது ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி மைதானத்தில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. ப்ளே ஆஃப் வாய்ப்பில் தொடர்ந்து நீடித்திருக்க கொல்கத்தா அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானதாக அமைந்திருந்தது.

- Advertisement -

சிறப்பாக ஆரம்பித்த தோற்ற டெல்லி

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்து வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெறுவதற்கு அருமையான அடித்தளத்தை உருவாக்கி இருந்தது.

இதற்குப் பிறகு சுனில் நரைன் பந்துவீச்சில் சிக்கி முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழந்த காரணத்தினால் இறுதியாக 190 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன் காரணமாக கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இன்னும் பிளே ஆப் வாய்ப்பில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த போட்டிக்கு பிறகு ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் யாதவ் அறைந்த விஷயம் தற்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ரிங்கு கன்னத்தில் அறைந்த குல்தீப்

இந்தப் போட்டி முடிவடைந்ததும் மைதானத்தில் வீரர்கள் குழுவாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது ரிங்கு நின்ற இடத்திற்கு குல்தீப் யாதவ் வந்தார். அவர் உடனே அருகில் இருந்த ரிங்கு சிங் கன்னத்தில் ஒருமுறை அறைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் இன்னொரு முறையும் அறைந்தார். இது ஏன் நடக்கிறது என்று ரிங்கு சிங்குக்கு புரியவேயில்லை. அவர் ஒரு மாதிரி குழப்பமாக காணப்பட்டார்.

இதையும் படிங்க: 7 தோல்வி.. சிஎஸ்கேகிட்ட எதிர் அணிகள் ரொம்ப கவனமா இருக்கணும்.. இனிதான் அவங்க ரொம்ப ஆபத்தானவங்க – பஞ்சாப் கோச் பேட்டி

மேலும் குல்தீப் யாதவ் விளையாட்டாக நடந்து கொண்டாலும் கூட, அது அந்த இடத்தில் கொஞ்சம் தீவிரமாகவே வெளிப்பட்டது. இதை ரிங்கு சிங் விரும்பவில்லை என்பது அவரது முகத்திலே நன்றாக தெரிந்தது. மேலும் பொது வெளியில் குல்திப் யாதவ் இப்படி நடந்து கொண்டது குறித்து தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையான முறையில் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -