இந்திய அணியில் வாய்ப்பு இல்லை.. இனி ஐபிஎல் மட்டும்தான் ஆடணும்.. இந்திய வீரர் குறித்து பாஸித் அலி பேட்டி

0
210

டி20 உலக கோப்பைக்கு பிறகு ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களை இந்திய அணி விளையாடி வந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்த சூழ்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரைக்கும் இந்த இந்திய பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியின் தொடக்க வரிசை மற்றும் மூன்றாவது வரிசைக்கு போட்டி நிலவி வருகிறது. இதில் கில், ஜெயஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்தியாவின் பேட்டிங் வரிசைக்கு பலமான போட்டி நடைபெறும் நிலையில் மற்றொரு இந்திய வீரரான இஷான் கிஷானும் இந்த தொடக்க வரிசை போட்டியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானில் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரைக்கும் இஷான் கிஷானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று பாகிஸ்தான் முன்னால் வீரர் பாசித் அலி கூறியிருக்கிறார்

- Advertisement -

இதுகுறித்து பாசித் அலி விரிவாக கூறும்போது “இஷான் கிஷானுக்கு ஆஸ்திரேலியா தொடர்பை இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு இல்லை என்பதால் இனி அவர் வருகிற ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம். அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய தேவையில் இருக்கிறார். ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால் இஷான் கிசானுக்கு அடுத்த வருடம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரைக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்பில்லை.

அதற்கு பிறகு வேண்டுமானால் என்ன நடக்கிறது” என்று பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் புச்சி பாபு தொடரில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடி வரும் இஷான் கிஷான் முதல் இன்னிங்ஸில் 107 பந்துகளை எதிர்கொண்டு 114 ரன்கள் குறித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீரை டிவில பாக்குறது வச்சு முடிவு பண்ணாதிங்க.. அவர் இப்படியானவர்தான் – ரிங்கு சிங் விளக்கம்

மேலும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் குறித்து பேசிய பாசித் அலி இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றியோ தோல்வியோ அடைந்தாலும் புஜாராவை நிச்சயமாக இழக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஏனெனில் எதிரணி பந்துவீச்சாளர்களை சோர்வடையச் செய்து மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ரன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தருவார் எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -