கம்பீரை டிவில பாக்குறது வச்சு முடிவு பண்ணாதிங்க.. அவர் இப்படியானவர்தான் – ரிங்கு சிங் விளக்கம்

0
13
Rinku

இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமாக ரிங்கு சிங்குக்கு நேற்றுடன் ஒரு வருடம் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருவர் பற்றியும் ரிங்கு சிங் பேசியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஐபிஎல் தொடரில் யாஸ் தயால் பந்துவீச்சில் கடைசி ஓவரில் 5 பந்துகளுக்கு 5 சிக்ஸர் அடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணிக்கு ரிங்கு சிங் தேர்வானார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய டி20 அணிகளும் மிகச் சிறப்பான முறையில் பினிஷர் ரோலில் விளையாடி தன்னுடைய இடத்தை உறுதி செய்து இருந்தார். ஆனால் டி20 உலக கோப்பை தொடரில் டீம் காம்பினேஷனுக்காக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக வந்திருக்கும் கம்பீர் ஏற்கனவே கேகேஆர் அணியில் மென்டராக இருந்த பொழுது சிங் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இத்தோடு ரோகித் சர்மாவின் இந்திய ஒருநாள் அணியில் ரிங்கு சிங்குக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தன்னுடைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் இருவரும் எப்படி ஆனவர்கள்? அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படியானது? என்பது குறித்து ரிங்கு சிங் வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

இவர்கள் குறித்து பேசி இருக்கும் ரிங்கு சிங் கூறும் பொழுது “கம்பீர் எப்பொழுதும் விளையாட்டில் சீரியஸ் ஆனவர். நீங்கள் போட்டியின் போது கம்பீர் மிகவும் சைலண்டாக அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் போட்டி முடிவடைந்ததும் அவர் எல்லோருடனும் சேர்ந்து என்ஜாய் செய்கிறார். நீங்கள் பார்ப்பது போல அவர் ஒவ்வொரு முறையும் சீரியஸ் ஆனவர் கிடையாது. போட்டி முடிவடைந்ததும் அவர் மிக சாதாரணமாக மாறிவிடுவார்.

இதையும் படிங்க : WTC பைனல்.. இந்தியா ஆஸி அணிகளுக்கு வந்த புது நெருக்கடி.. தென் ஆப்பிரிக்க கோச் சவால்.. மாறும் நிலைமைகள்

என்னுடைய கேப்டன் ரோகித் சர்மா மிகவும் நல்லவர். அவர் இளைஞர்களுடன் பேசி அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கக்கூடியவர். அவருடைய தலைமையின் கீழ் விளையாடுவது எனக்கு எப்பொழுதும் சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -