பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் தன்சிm ஹசன் சாகிப் தனக்கு முன்னாள் இருக்கும் பேட்ஸ்மேன் யார் எதிரணியார் என்பது குறித்து தான் பார்க்க மாட்டேன் எனவும் தன் பலத்தை நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை மத்திய பிரதேஷ் குவாலியர் புதிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மீதம் இரண்டு போட்டிகள் அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
ரோகித் சர்மாவுக்கு சொன்னார்கள்
இந்த நிலையில் பங்களாதேஷ் வேகபந்துவீச்சாளர் தன்ஷிம் ஹசன் சாகிப் பேசும்பொழுது “என்னுடைய முதல் போட்டியில் என்னுடைய எதிரணியாக இந்தியா மற்றும் எதிரணி வீரராக ரோகித் சர்மா இருந்தார். ஆனால் உண்மையில் நான் அது குறித்து எதுவுமே நினைக்கவில்லை. நான் புதியவன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தயாராக இருக்க மாட்டேன் என்று கூறப்பட்டது. ஆனால் நான் என் பலத்தில் விளையாடுவதில் உறுதியாக இருந்தேன்”
“எனக்கு என்ன பலம் இருக்கிறது என்பதை மட்டுமே யோசித்தேன். நான் அதில் மட்டுமே என்னுடைய முழு கவனத்தையும் வைத்தேன். அதை களத்தில் செயல்படுத்த முயற்சி செய்தேன். என் எதிரில் இருப்பவர் யார் என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் ஒரு நல்ல பந்து எல்லோருக்கும் நல்ல பந்துதான்”
நான் தயாரான விதம் இப்படிதான்
மேலும் பேசிய அவர் “என்னுடன் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களுக்கு பங்களாதேஷ் அணியில் இடம் கிடைத்த பொழுது எனக்கும் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எப்போது பங்களாதேஷ் அணிக்கு சென்றாலும் முழுமையாக தயாராகி விட்டுதான் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளுக்குப் பிறகு வெளியில் வர நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க: கோப்பையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.. இத மட்டும் செய்யுங்க இந்தியாவுல ஜெயிக்கலாம் – சர்பராஸ் கான் பேட்டி
“அந்த நேரத்தில் நான் என்னைப் பற்றி நிறைய சிந்தித்து கடுமையாக உழைத்துக் கொண்டு இருந்தேன். எனது திறமைகளை எவ்வாறு மேம்படுத்துவது? என்பதில் கவனம் செலுத்தினேன். மேலும் என்னுடைய சிறந்த வெர்ஷனை கொண்டு வந்து அணியில் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்” என்று தெரிவித்திருக்கிறார்.