இந்த வருடம் இராணி கோப்பையை ரெஸ்ட் ஆப் இந்திய அணிக்கு எதிராக ரஞ்சி சாம்பியன் மும்பை மாநில அணி கைப்பற்றியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற சர்பராஸ் கான் உருக்கமாக பேசியிருக்கிறார்.
இந்த வாரத்தில் ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் ரகானே தலைமையிலான ரஞ்சி சாம்பியன் மும்பை மாநில அணியும் இராணி கோப்பை டெஸ்ட் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியை உத்தரப்பிரதேஷ் ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது.
இரானி கோப்பை 2024
இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ருதுராஜ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 537 ரன்கள் குவித்தது. சர்பராஸ் கான் ஆட்டம் இழக்காமல் 256 பந்துகளில் 222 ரன்கள் குவித்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 191 ரன்கள் எடுக்க அந்த அணியின் 416 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக இந்த போட்டி டிராவில் முடிந்த பொழுதும் கூட முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் அடிப்படையில் இரானி கோப்பை சாம்பியன் பட்டத்தை மும்பை அணிக்கை கைப்பற்றியது.
இதையெல்லாம் செய்ய வேண்டும்
இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகன் விருது வென்றார். பின்பு பரிசளிக்கும் நிகழ்வில் பேசிய அவர் “நிச்சயமாக இந்த கோப்பை அணிக்கானது. அதே சமயத்தில் விபத்தில் காயம் அடைந்த என் தம்பி முஷீர் கானுக்காக சதம் அடிப்பேன் என்று வீட்டில் கூறியிருந்தேன். அந்த அடிப்படையில் இது என் தம்பிக்கானது!”
இதையும் படிங்க : இந்திய அணியை எங்களால ஜெயிக்க முடியும்.. நாங்க அந்த விஷயத்துல முழுசா ஃபோகஸ் பண்ண போறோம் – தவ்ஹித் ஹ்ரிடோய் கருத்து
“நான் என் தந்தையுடன் என்ன பயிற்சிகளை செய்தேனோ அதையே நான் விளையாட்டிலும் பின்பற்ற முயற்சிக்கிறேன். இந்தியா முழுவதும் பயணப்பட்டு நீங்கள் விளையாடிக் கொண்டிருப்பதால் உங்களுக்கு விக்கெட்டுகள் எப்படி இருக்கின்றன? என்பது பழகி விடுகிறது. ஒருவர் அவருடைய சொந்த ஆட்டத்தை பகுத்துப் பார்க்க வேண்டும். மேலும் சீனியர் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். மேலும் தன்னுடைய பலவீனத்தில் வேலை செய்து சரி செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால் நாம் வெற்றி பெற முடியும்” என்று கூறி இருக்கிறார்.