உலக கிரிக்கெட்டில் நவம்பர் மாதம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆஸ்திரேலியாவில் மோதிக் கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார்.
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு இரண்டு அணிகளுக்குமே இந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. மேலும் உலக அளவில் இந்த இரண்டு அணிகளும் சிறப்பான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதால் பெரிய அளவில் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.
வரலாற்றை மாற்றிய விராட் கோலி
இந்திய அணி முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சென்று விளையாடிய டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையில் கைப்பற்றியது. அதனால் வரையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பல ஜாம்பவான்கள் விளையாடி இருந்த பொழுதும் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணியால் கைப்பற்ற முடியவில்லை.
இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணி தற்காலிக கேப்டன் ரகானே தலைமையில் ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக தொடரை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. மேலும் கடந்த 10 வருடங்களாக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி இந்தியா வாசம் இருந்து வருகிறது.
பாட் கம்மின்ஸ் நம்பிக்கை
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் பாட் கம்மின்ஸ் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு எதிராக கடைசியாக நடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் நாங்கள் வெற்றி பெறவில்லை. எனவே நீண்ட காலமாக நீடித்து வருகிறது. தற்போது கடந்த கால நம்பிக்கையில் இருந்து இதை திருத்தி எழுத வேண்டிய காலம் வந்திருக்கிறது.
உங்களுக்கு தெரியும் எங்களுக்கு எதிராக அவர்கள் விளையாடி சிறப்பான வெற்றிகள் நிறைய முறை பெற்று இருக்கிறார்கள். அதேபோல் அவர்களுக்கு எதிராக நாங்களும் சிறப்பான வெற்றிகளை பலமுறை பெற்றிருக்கிறோம். கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி பொதுவான இடத்தில் நடைபெற்ற பொழுது நாங்கள் அவர்களுக்கு எதிராக வென்று சாம்பியன்ஷிப்பை கைப்பற்றினோம்.
இதையும் படிங்க : பங்களாதேஷுடன் தோல்வி.. WTC புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் பரிதாபம்.. மாறிய இடங்கள்.. மேஜிக் நடக்குமா?
இரண்டு அணிகளும் மோதிக் கொள்வது எப்பொழுதுமே கடுமையான போட்டியாகவே இருந்திருக்கிறது. வெற்றி வாய்ப்பு 50க்கு 50 என வெற்றி வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இருப்பதாக உணர்கிறேன். இந்த தொடருக்காக நான் மிகுந்த உற்சாகத்துடன்” காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.