இந்த தடவ மிஸ் ஆகாது.. இந்திய அணி இதுல கண்டிப்பா மாட்டுவாங்க.. இவங்க 4 பேர் போதும் – கில்லஸ்பி கருத்து

0
660

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முக்கிய பங்காற்ற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஜேஷன் கில்லஸ்பி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கு அதிக அளவில் இருப்பதாக அதற்கான காரணத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்த இரண்டு முறை இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோர் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்றாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பறக்க உள்ள நிலையில் இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலியா அணி பல்வேறு கோணங்களில் திட்டம் தீட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக உள்ள நிலையில் இந்த முறை கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா அணிக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் சிறந்த வேலையை செய்வதற்கு அவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பேன். அவர்கள் நாட்டின் சிறந்த பந்துவீச்சாளர்கள். அவர்களது பந்து வீச்சு பதிவுகள் சுயமாக பேசும் என்று நினைக்கிறேன். இந்த நால்வர் கூட்டணியானது (ஸ்டார்க், கம்மின்ஸ், ஹெசில்வுட், நாதன் லயன் ) ஆஸ்திரேலியாவின் சிறந்த பந்து வீச்சு தாக்குதல் ஆகும்.

இந்திய அணி தற்போது சிறந்த பார்மில் நல்ல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப காலங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தாலும் இந்த முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு ஆஸ்திரேலியா அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். மேலும் ஸ்மித்தை தொடக்க ஆட்டக்காரராக உயர்த்துவது குறித்து கேட்கிறீர்கள். டேவிட் வார்னர் போன்ற வீரர்களின் இடத்தை நிரப்புவது என்பது கடினமானது.

இதையும் படிங்க:எங்க ரிஸ்வான் சொந்த பேட்ஸ்மேனை சிக்க வைக்கறவரு.. ஆனா ரிஷப் பண்ட் வேற மாதிரி – பாக் டேனிஷ் கனேரியா பேட்டி

ஸ்மித் வரிசையில் மேலே செல்வது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவர் நான்காவது இடத்தை பேட்டிங் செய்ய வேண்டும் என்று என்னுடைய உள் உணர்வு கூறுகிறது” என்று கூறி இருக்கிறார். இதன் மூலமாக இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்று கில்லஸ்பி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -