பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனியரியா பாகிஸ்தான் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் மற்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இருவரையும் ஒப்பிட்டு யார் சிறந்தவர்? என்று கூறியிருக்கிறார்.
டேனிஷ் கனேரியா இந்த ஒப்பீட்டை செய்யும் பொழுது மிகவும் வெளிப்படையாகவே முகமது ரிஸ்வானை விமர்சனம் செய்திருக்கிறார். உடன் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்கக்கூடியவராக முகமது ரிஸ்வான் இருப்பதாக டேனிஷ் கனேரியா தெரிவித்திருக்கிறார்.
அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம்
முகமது ரிஸ்வானை எடுத்துக் கொண்டால் கடந்த சில ஆண்டுகளாக பாபர் அசாம் உடன் பாட்னர்ஷிப்புகளில் பெரிய பங்கை வகித்தவர். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ரன்கள் எடுத்து வந்தார். அதே சமயத்தில் சரளமாக சென்று விளையாடாமல் தடுத்து போராடி விளையாடி எப்படியும் ரன்கள் எடுக்கக்கூடியவராக இருப்பார்.
அதே சமயத்தில் ரிஷப் பண்ட் இந்திய பேட்டிங் யூனிட்டின் எக்ஸ் பேக்டராக ஆரம்பத்தில் இருந்து இருந்து வருகிறார். தடுத்து பொறுமையாக விளையாடுவது என்கின்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அணி நிர்வாகம் அவரை ஒரு அதிரடி தாக்குதல் நிகழ்த்தும் பேட்ஸ்மேன் ஆகவே வைத்திருக்கிறது. அவரும் அந்த முறையில் விளையாடுவதையே விரும்புகிறார்.
ரிஸ்வான் சொந்த அணி பேட்ஸ்மேனை சிக்க வைக்கிறார்
இவர்கள் குறித்து பேசி இருக்கும் டேனிஷ் கனேரியா கூறும் பொழுது “இருவரில் சிறந்தவர் ரிஷப் பண்ட் என்று நான் சொன்னால் நீங்கள் என்னிடம் ஏன் முகமது ரிஸ்வான் இல்லையா? என்று கேட்பீர்கள். ஏனென்றால் எல்லா அணிகளுக்கும் ரன்கள் மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் முகமது ரிஸ்வான் அணிக்காக ரன்கள் எடுக்கவில்லை”
“இதுதான் அவர் குறித்து எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அந்த போட்டியில் முகமது ரிஸ்வான் பேட்டிங்கில் இருக்கும் பொழுது, ரோகித் சர்மா பும்ராவை கொண்டு வந்தார். ஏனென்றால் முகமது ரிஸ்வான் விக்கெட்டை பும்ரா எடுத்து விட முடியும் என்பது ரோகித் சர்மாவுக்கு நன்றாக தெரியும்”
இதையும் படிங்க : 5-0.. இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்து அனுப்பி வைப்போம்.. 10 வருஷம் சும்மா இல்ல – நாதன் லயன் சவால்
“அந்த போட்டியில் இது தெளிவாக தெரிந்தது. அவர் நல்ல பந்துகளை மட்டுமே அடித்தார். அதே சமயத்தில் மற்ற பேட்ஸ்மேன் அக்சர் பாட்டில் பந்துவீச்சில் விளையாடவே கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள். அப்படியான நேரத்தில் அவர் ஒன்று இரண்டு ரன்கள் எடுத்துக் கொண்டிருந்தார். இதன் காரணமாக மற்ற பேட்ஸ்மேன்களை அவர் சிக்க வைத்தார்.ரோகித் சர்மா பும்ராவை கொண்டு வந்து விக்கெட்டை எடுத்ததும் நன்றி சொல்லிவிட்டு ரிஸ்வான் கிளம்பிவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.