போட்டியின் நடுவில் விலகிய அஷ்வின்.. பவுலிங் பேட்டிங் செய்ய மாற்று வீரர் அனுமதி உண்டா?.. என்ன நடக்கும்?

0
1888
Ashwin

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சோதனைகளை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.

இந்தத் தொடருக்கான அணி அறிவிப்பின்போதே முகமது சமி காயத்தின் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு கிடைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் கிடைக்கவில்லை.

- Advertisement -

மேலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விலகிய விராட் கோலி, அடுத்து ஒட்டுமொத்தமாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இருந்து விலகி விட்டார்.

இது அப்படியே தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா, கேஎல்.ராகுல் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கும் பொழுது, இது இந்திய அணிக்கும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மிகப்பெரிய தலைவலியாக மாறி இருந்தது.

இவர்கள் எல்லோருமே போட்டிக்கு முன்பாகவே அணியை விட்டு நகர்ந்திருந்தார்கள். இதனால் மாற்று வீரர்களை வைத்து ஏதாவது சமாளிப்பதற்கான வாய்ப்புகள் இருந்தது.

- Advertisement -

ஆனால் தற்பொழுது மூன்றாவது டெஸ்டில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்தில் அவசர மருத்துவ சூழ்நிலை காரணமாக, போட்டியில் பாதியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் மிகவும் வலிமையான இடத்தில் இருக்கிறது. நாளை தொடர்ந்து பேட்டிங் செய்யும் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த, நிச்சயம் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேவை என்ற நிலையில்தான் இப்படி ஒரு சோகமான நிகழ்வு நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : நடந்து கொண்டிருக்கும் 3வது டெஸ்டில் இருந்து அஷ்வின் திடீர் விலகல்.. பிசிசிஐ அவசர அறிவிப்பு

ரவிச்சந்திரன் அஸ்வின் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறுகின்ற காரணத்தினால், அதற்கு பதிலாக ஃபீல்டிங்கில் மட்டுமே மாற்று வீரரை கொண்டு வர முடியும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கொண்டுவர முடியாது. இதற்கு கிரிக்கெட் விதி அனுமதிக்கவில்லை. எனவே இந்தப் போட்டியில் இந்திய அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட முடியும் என்பது பின்னடைவாக அமைகிறது.