“2023 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானை பார்த்து நாங்கள் பயப்பட்டோமா?” – பாகிஸ்தான் பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி!

0
574
Indvspak

இந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்துக்கும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணிக்கும் இடையே துவங்க இருக்கிறது!

இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து அக்டோபர் எட்டாம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துவதற்கு இருக்கிறது. இந்திய அணி ஆரம்ப கட்டப் போட்டிகளில் மிகவும் வலிமையான அணிகளை எதிர்கொள்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே போல பாகிஸ்தான் அணி அக்டோபர் ஆறாம் தேதி, தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தகுதி சுற்றில் முதல் இடத்தை பிடிக்கும் அணியுடன் தனது முதல் போட்டியில் விளையாட இருக்கிறது.

இந்த இரண்டு அணிகளும் இந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் மோத இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் மிக அதிகபட்சமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் வைத்து ஆப்கானிஸ்தானையும், பெங்களூரில் வைத்து ஆஸ்திரேலியாவையும், அகமதாபாத்தில் வைத்து இந்திய அணியையும் எதிர்கொள்வது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து மறுப்பு கூறப்பட்டு வந்தது. அதற்கு முற்றுப்புள்ளிகள் வைக்கப்பட்டு கடந்த வாரத்தில் உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்பட்டது.

- Advertisement -

தற்போது இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனரும் தலைமை பயிற்சியாளருமான மிக்கி ஆர்தர் கூறும் பொழுது ” உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி ஒன்றும் பெரிதானது கிடையாது. இரு நாடுகளுக்கு இடையேயான உணர்வுகள் மற்றும் உறவுகள் பார்வையில், அது உருவாக்கும் ஆர்வத்தையும் அதனுடன் செல்லும் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் நீங்கள் கிரிக்கெட் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு உலகக்கோப்பையை வெல்ல விரும்பினால் எல்லா அணிகளுக்கு எதிராகவும் ஒரே சிரத்தையோடு முயற்சியோடு சிறப்பாக விளையாடினால் மட்டுமே உலகக் கோப்பை மாதிரியான பெரிய கோப்பைகளை வெல்ல முடியும்.

நாங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடுவது குறித்து விவாதித்தோம். ஆனால் அது விவாதம் மட்டும்தான். சென்னையில் ஆப்கானிஸ்தான் அணி உடன் நாங்கள் விளையாட கூடாது என்பது எங்களுடைய முழு திட்டம் கிடையாது. எந்த அணியும் அவர்களோடு எங்கும் விளையாட தயாராகத்தான் இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்.