இன்று இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் விக்கெட் கைப்பற்ற விராட் கோலி கொடுத்த சிறப்பான ஐடியா வேலை செய்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.
இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக முதல் மூன்று நாட்களில் 34 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டு இருந்தது. இருந்த போதிலும் இந்திய அணி 34 ஓவர்களில் 285 ரன்கள் குவித்து போட்டியை முடிவு நோக்கி திருப்பி அசத்தியிருக்கிறது.
அதிரடி டிக்ளர் செய்த ரோகித் சர்மா
இந்திய அணி நாளை வரை விளையாடி 400 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் இருவரும் இன்று முடிந்த வரையில் அதிரடியாக விளையாடி, பங்களாதேஷ் அணியை தாண்டி லீடிங் எடுத்து அவர்களை இன்று விளையாட வைக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தார்கள்.
இதன் காரணமாக இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 34.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இந்திய அணி இந்த நேரத்தில் 52 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்ய வந்தது.
அஸ்வினுக்கு விராட் கோலி தந்த ஐடியா
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே அஸ்வினுக்கு பந்து வீசும் வாய்ப்பை ரோகித் சர்மா கொடுத்தார். பங்களாதேஷின் இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்ததால் அஸ்வின் உற்சாகமாக பந்து வீசினாலும் கூட விக்கெட் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் விராட் கோலி பந்து நன்றாக காற்றில் பிளைட் செய்து லெக் ஸ்டெம்பில் இருந்து வெளியில் திருப்பும் படி அஸ்வினுக்கு யோசனை கூறினார். இப்படி திருப்பும் பொழுது எல்பிடபிள்யூ வாய்ப்பு கிடைக்கும், அல்லது எட்ஜ் எடுத்து ஸ்லிப்பில் கேட்ச் கிடைக்கும்.
இதையும் படிங்க : இந்தியா ஆடறது இங்கிலாந்தின் பாஸ்பால் என சொன்ன மைக்கேல் வாகன்.. இந்திய ரசிகர்கள் கோபம்.. என்ன நடந்தது?
இதற்கு அடுத்து உடனே பந்து வீச்சுக்கு வந்த அஸ்வின் விராட் கோலி சொன்ன அதே பந்தை துல்லியமாக வீசினார். அந்தப் பந்தில் ஜாகிர் ஹசன் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். விராட் கோலி கொடுத்த ஐடியா வேலை செய்தது சுவாரசியமாக இருந்தது. அதே சமயத்தில் அந்த ஐடியாவிற்கு தகுந்த துல்லியமான பந்தை வீசுவது மிகவும் சிரமமானது. ஆனால் அதை அஸ்வின் மிக அழகாக வீசி விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது