9 அணிக்கும் எச்சரிக்கை பண்றேன்.. அந்த பிளேயர் திரும்ப வந்துட்டார்.. இனி நிறுத்த முடியாது – அம்பதி ராயுடு பேச்சு

0
2269
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்த ஒரு வீரர் திரும்பி விட்டதால் அது மீதம் இருக்கும் ஒன்பது அணிகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது என இந்திய முன்னாள் வீரர் அம்பதி ராயுடு எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது பாதிக்கட்டத்தை தாண்டிவிட்டது. இந்த நிலையில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாக மாறியிருக்கிறது. அதே சமயத்தில் மற்ற ஏழு அணிகளும் நான்கு இடங்களுக்கு போட்டியிடுகின்றன.

- Advertisement -

திடீரென எழுச்சி கண்ட மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் வலிமையான அணியாக எல்லோராலும் கூறப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்ப்பார்ப்புக்கு மாறாக தொடரின் துவக்கத்தில் மிக மோசமாக விளையாடி போட்டிகளை இழந்து வந்தது. எனவே கடந்த ஆண்டு போல மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிடும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

இப்படியான நிலையில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளை வென்று ஒன்பது போட்டிகளில் ஐந்து போட்டிகளை வென்றதன் மூலமாக 10 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மிக முக்கியமான விஷயமாக பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அடுத்தடுத்து அதிரடியான இரண்டு அரை சதங்கள் அடித்ததின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அவர் மீண்டும் வந்து விட்டார்

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “ரோகித் சர்மா ரிதம் மீண்டும் திரும்ப வந்துவிட்டது. இதில் சிறந்த அம்சம் என்னவென்றால் அவர் ஷாட் அடிப்பதற்காக அதிக சக்தியை பயன்படுத்தவில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஃபுல் ஷாட்டில் அவர் மாஸ்டர் கிளாஸ் காட்டினார். மேலும் ப்ளீக், ஸ்கொயர் கட் மற்றும் லேட் கட் ஷாட்களையும் மிகச் சிறப்பாக விளையாடினார். ஐபிஎல் முடிவில் அவர் மீண்டு வந்து விட்டார். இனி அவரை நிறுத்துவது மிகவும் கடினம் என்று கூறி இருக்கிறார்”

இதையும் படிங்க : எது வேணா இருக்கட்டும்.. நான் அடுத்த வருஷம் ஐபிஎல் ஆடுவேன் – பாகிஸ்தான் ஸ்டார் வீரர் பேட்டி

இதுகுறித்து ஹர்பஜன்சிங் பேசும் பொழுது “ரோகித் சர்மா தொடரின் ஆரம்பத்தில் பவர் பிளேவில் அதிக ரன்கள் எடுக்க முயற்சி செய்தார். இது அவருக்கு பெரிய இடையூறாக இருந்தது. இதன் காரணமாக அவர் ஆட்டம் இழந்து வந்தார். இப்போது அதை அவர் புரிந்து கொண்டு, சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை செய்வதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -