எது வேணா இருக்கட்டும்.. நான் அடுத்த வருஷம் ஐபிஎல் ஆடுவேன் – பாகிஸ்தான் ஸ்டார் வீரர் பேட்டி

0
179
Amir

தற்போது மிகவும் பதட்டமான சூழ்நிலை பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் நேரத்தில், பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஒருவர் அடுத்த வருடம் தான் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தைரியமாக தெரிவித்து இருக்கிறார்.

காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மோசமான தாக்குதல் சம்பவம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மீண்டும் பதட்டத்தை பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அரசியல் ரீதியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் விளையாடாது என திட்டவட்டமாக தற்போது அறிவித்திருக்கிறது.

- Advertisement -

ஒரே காலகட்டத்தில் இரண்டு தொடர்கள்

தற்போது முதல் முறையாக இந்தியாவின் ஐபிஎல் மற்றும் பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடர் ஒரே காலகட்டத்தில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானில் இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்ற காரணத்தினால் பிஎஸ்எல் தொடர் நடத்தும் காலம் தள்ளி வந்திருக்கிறது. எனவே முதலில் பிஎஸ்எல் தொடருக்கு ஒரு வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் அந்தத் தொடரில் தான் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது குவேட்டா அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமீர் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்

இது குறித்து முகமது அமீர் பேசும் பொழுது “சத்தியமாக எனக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நான் விளையாடுவேன். இதை நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொள்கிறேன். வாய்ப்பு கிடைக்காமல் போனால் மட்டுமே நான் பிஎஸ்எல் தொடரில் விளையாடுவேன். அடுத்த ஆண்டு எனக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைத்தால் நான் ஏன் விளையாட கூடாது?”

இதையும் படிங்க : இசான் செஞ்சது நேர்மையானதே கிடையாது.. ரிக்கி பாண்டிங் சொல்றதுதான் சரி – சேவாக் விமர்சனம்

“அடுத்த ஆண்டும் இதே போல இரண்டு தொடர்களும் ஒரே நேரத்தில் மோதிக் கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர்பாக நடைபெற்றதால் அட்டவணை ஒரே நேரத்தில் வந்திருக்கிறது. நான் முதலில் பிஎஸ்எல் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு விட்டால் பிறகு ஐபிஎல் தொடருக்கு வர முடியாது. அப்படி வந்தால் என்னை தடை செய்து விடுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -