3 சதம்.. ருதுராஜுக்காக கம்பீர் போட்ட ஆஸி திட்டம்.. இடையில் வந்த அபிமன்யு ஈஸ்வரன்.. திடீரென மாறும் நிலைமைகள்

0
455
Gambhir

தற்போது நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக விளையாடும் 29 வயதான பெங்கால் துவக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் சதம் அடித்து தனி ஆளாக போராடி வருகிறார்.

ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி ரஞ்சி சாம்பியன் மும்பை மாநில அணிக்கு எதிராக தற்பொழுது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மும்பை அணிக்கு சர்பராஸ் கான் 222 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, அந்த அணி முதல் இன்னிங்சில் 539 ரன்கள் குவித்தது.

- Advertisement -

தனியாகப் போராடும் அபிமன்யு ஈஸ்வரன்

இந்த நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு கேப்டன் ருதுராஜ், சாய் சுதர்ஷன், இஷான் கிஷான் மற்றும் தேவ்தத் படிக்கல் என முன்னணி வீரர்கள் ஏமாற்ற, துவக்க ஆட்டக்காரர் அபிமன்யு ஈஸ்வரன் மட்டுமே நிலைத்து நின்று விளையாடி நேற்று ஆட்டம் இழக்காமல் 151 ரன்கள் எடுத்தார். மேலும் இன்று நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிக் கொண்டு வருகிறார்.

இதற்கு முன்பாக நடைபெற்ற துலீப் டிராபியில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகளுக்கு எதிராக இரண்டு சதங்கள் அடித்தார். தற்போது அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டில் 97 முதல் தர போட்டிகளில் விளையாடி 7000க்கும் மேற்பட்ட ரன்களை 48 ஆவரேஜில் குவித்திருக்கிறார். இதில் 25 சதங்கள் மற்றும் 29 அரை சதங்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ருதுராஜிக்கான கம்பீரின் திட்டம்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு மூன்றாவது துவக்க வீரராக ருதுராஜை அழைத்துச் செல்லவே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரை விளையாட விடாமல், நேராக இரானி கோப்பையில் விளையாட வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ருதுராஜ் முதல் இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஐபிஎல்-ல் தோனி விளையாடும் வரை.. விதியை மாத்திக்கிட்டே இருப்பாங்க – முகமது கைஃப் நேரடி பேச்சு

இன்னொரு பக்கத்தில் துவக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் தற்பொழுது வரையில் மூன்று சதங்கள் கடைசி மூன்று போட்டிகளில் அடித்திருக்கிறார். மேலும் 97 முதல் தர போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவராக இருக்கிறார். இந்திய ஏ அணிக்காக பல வெளிநாடுகளில் விளையாடி இருக்கிறார். தற்போது ருதுராஜிக்கான கம்பீரின் திட்டத்தில் அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியாக நுழைந்திருக்கிறார்.

- Advertisement -