ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடும் காலம் வரையில் அவருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் விதிகளை மாற்றிக்கொண்டே இருக்கும் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து முகமது கைஃப் இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
அன் கேப்டு விதி மீண்டும் வந்தது
ஐபிஎல் தொடரில் அன் கேப்டு விதி ஆரம்பத்தில் இருந்தது. ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐந்து வருடங்கள் விலகி இருந்தால் அவரை அன் கேப்டு வீரராக எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வீரரை நீங்கள் தக்க வைக்க நினைத்தால் அவரை மிகவும் குறைவான பணத்திற்கு தக்க வைக்கலாம்.
தற்போது இந்த விதியை இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த விதியின் கீழ் மகேந்திர சிங் தோனியை தற்பொழுது வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி நிர்வாகத்தால் தக்க வைக்க முடியும். எனவே இந்த விதி அவருக்காக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது என முகமது கைஃப் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் வேறு சில வீரர்களும் பயன் அடையலாம் என்றும் கூறப்படுகிறது.
தோனிக்காகவே விதிகள் மாற்றப்படுகிறது
இதுகுறித்து பேசி இருக்கும் முகமது கைஃப் கூறும் பொழுது “தோனியை உங்களுக்கு மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர் மிகவும் பிட்டாக இருக்கிறார். அவர் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். அவர் விளையாட விரும்பும் வரையில் ஐபிஎல் தொடரில் விதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். அவர் விளையாட விரும்பினால் ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அவர் அவ்வளவு பெரிய மேட்ச் வின்னர். சிஎஸ்கேவுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார்”
இதையும் படிங்க : வீட்ல டீம்ல சொல்லிதான் இரட்டை சதம் அடிச்சேன்.. அதுக்கான காரணம் இதுதான் – சர்பராஸ் கான் பேட்டி
“விதி சரியாகவே மாற்றப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் பொழுது, நன்றாக விளையாடும் பொழுது ஏன் அவர் விளையாடக்கூடாது. எனவே அவருக்காக விதியை மாற்றி விளையாட விடுங்கள். அவருக்காகத்தான் விதி மாற்றப்பட்டது என்பதுநன்றாகவே எல்லாருக்கும் தெரியும். அவருக்காக எனும் பொழுது எல்லோருமே இதை விரும்ப செய்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.