நான் சொல்ற இந்த பவுலரை அடித்தால் இந்தியாவுக்கு தான் கோப்பை.. ஏபி டிவில்லியர்ஸ் சூப்பர் ஐடியா

0
864

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்கள் அடிக்க வேண்டும். கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருக்க இன்றைய ஆட்டத்தில் 97 ஓவர்கள் வீசப்பட வேண்டும்.

இந்த நிலையில் இது கடினமான வேலை என்றாலும் இந்திய அணி ஆட்டத்தை சமனில் முடிக்க போராட வேண்டியது இருக்கும். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் இந்திய அணிக்கு ஒரு யோசனையை கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த யோசனையை கேட்டால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற ஒரே வழி நாதன் லயானை அடித்து ஆட வேண்டும். அவர் ஓவரில் குறைந்தது 5 ரன்கள் என்று வேகத்தில் இந்திய வீரர்கள் அடிக்க வேண்டும்.

இரண்டாவது புதிய பந்து வரும்வரை இந்திய அணி அதிகபட்சம் ஒரு விக்கெட்டை இழக்கலாம். இது நடந்தால் முடிவு எப்படி வேண்டுமானாலும் போகலாம். நாதன் லயனுக்கு எதிராக அதிரடியாக விளையாடுங்கள். அவர் பந்துவீச்சை ஆக்ரோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்று டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நான்காவது நாள் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. இதனால் கோலியும் ரகானேவும் எந்த நெருக்கடியையும் இன்றி 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் வைத்தார்கள். இதேபோன்று மிச்செல் ஸ்டார்க் பந்து வீச்சும் ஆடுகளத்தில் எடுபடவில்லை.
ஸ்டார்க் ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் கொடுத்து மோசமான செயல்பாட்டை நேற்று பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

இதைப்போன்று கேப்டன் பாட் கம்மின்சும், ஒரு ஓவருக்கு 4.6 ரன்களை விட்டுக் கொடுத்தார். இரண்டு அணிகளுமே வெற்றிக்காக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் வெற்றி வாய்ப்பு இந்தியாவை விட ஆஸ்திரேலியாவுக்கு தான் அதிகமாக இருக்கிறது.

ஏனென்றால் ஆட்டத்தில் நான்கு நாட்கள் ஆஸ்திரேலியா தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார்கள். இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் எந்த அணி நன்றாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.