15 வருசமா அந்த ஒரு இந்திய பவுலரை மட்டும் சமாளிக்கவே முடியல – கழற்றிவிடப்பட்ட வீரரை புகழ்ந்த ஆரோன் பிஞ்ச்

0
12824

உலகில் நீங்கள் எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாகவும் இருக்கலாம். ஆனால் உங்களால் ஒரு சில பந்துவீச்சாளரிடம் மட்டும் எதிர்கொள்ள தடுமாறுவீர்கள். வசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சோயிப் அக்தர் போன்ற பந்துவீச்சாளர்களே அலறவிட்ட சச்சின் டெண்டுல்கர், தென்னாப்பிரிக்கா வீரர் குலுஸ்னர்  பந்துவீச்சை மட்டும் எதிர்கொள்ள தடுமாறினார்.

அப்படி சில பவுலர்களிடம் மட்டும் சில பேட்ஸ்மேன்கள் அதிக முறை ஆட்டம் இழப்பார்கள்.  அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமாரை பார்த்தாலே பயந்து நடுங்குவார் ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த  பிஞ்ச் கடந்த பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதனை எடுத்து தற்போது மிட்செல் மார்ஸ் ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு புவனேஸ்வர் குமாரிடம் தொடர்ந்து நான்கு முறை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆட்டம் இழந்திருக்கிறார். அதில் அவர் அடித்த ரன்கள் 6, 6, 14 மற்றும் 0 ஆகும்.

புவனேஸ்வர் குமார் தன்னுடைய ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை அலற விட்டிருக்கிறார். வேகம் குறைவாக இருந்தாலும் அவருடைய ஸ்விங் பந்து வீச்சை எதிர்கொள்வது அவ்வளவு சிரமமான காரியமாக உலகின் முன்னணி வீரர்களுக்கு திகழ்ந்து இருக்கிறது.

ஒரு நாள் போட்டி மட்டுமல்லாமல் டி20யிலும் இரண்டு முறை புவனேஸ்வர் குமார் இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் புவனேஸ்வர் குமார் உங்களை ஏன் தடுமாற வைத்திருக்கிறார். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்று உங்களால் விவரிக்க முடியுமா என்று கேள்வி கேட்டிருந்தார்.

- Advertisement -

வேகப் பந்து வீசும் போது நீங்கள் கால்களை சரியாக நகர்த்தி விளையாடவில்லையா என்றும் அவர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஆரோன் பிஞ்ச், ஆமாம் 15 ஆண்டுகளாக நான் அதை முயற்சி செய்தேன்.

என்னால் அது நடக்காமல் இருப்பதை தடுக்க முடியவில்லை என்று பின்ச் கூறினார். 146 ஒரு நாள் 103 டி20 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

மொத்தமாக 8,804 ரன்கள் அடித்துள்ள அவர் 19 சதங்களும் 51 அரை சதங்களும் அடித்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக டி20 உலக கோப்பை வாங்கி கொடுத்த கேப்டன் என்று பெருமையும் அவருக்கு சேரும். அப்படிப்பட்ட வீரர் புவனேஸ்வர் குமாரை பார்த்து தடுருமாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.