தென் ஆப்பிரிக்கா அணியின் 18 வயதான இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் க்வேனா மபாகாவுக்கு ஆதரவும் வாய்ப்பு திறந்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என தென் ஆப்பிரிக்க வெள்ளைப் பந்து அணிகளின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியிருக்கிறார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது. நாளை முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பிக்கிறது.
அண்டர் 19 உலகக் கோப்பை நாயகன்
இந்த ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் க்வேனா மபாகா மிகச் சிறந்த பந்துவீச்சு செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இந்த தொடரில் இவரை தொடர் நாயகன் விருதையும் பெற்றார். இதன் காரணமாக இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பு ஐபிஎல் தொடரில் கிடைத்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அறிமுகப் போட்டியில் நான்கு ஓவர்களுக்கு 66 ரன்கள் கொடுத்து மிக மோசமான துவக்கமாக அமைந்தது. இதற்கு அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து ஜெய்ஸ்வால் விக்கெட்டை கைப்பற்றினார். பிறகு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். தற்போது இவருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் பும்ராவை விட சிறப்பாக வருவேன் என்று கூறியிருக்கிறார்.
மீடியாக்கள் அழுத்தத்தை உண்டாக்குகின்றன
இவர் குறித்து தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ராப் வால்டர் கூறும் பொழுது “நாங்கள் ஐபிஎல் அனுபவத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், அப்பொழுது வான்கடே மைதானத்தில் பெரிய கூட்டத்தில் முன்பாக விளையாடிவிட்டதாக கூறும் பள்ளி சிறுவர்கள் யாருமே கிடையாது. அவர் விளையாடி இருக்கிறார்.
அவருடைய திறமைகள் ஒருபுறம் இருக்க நான் அவருடைய மனநிலையையும் அமைதியையும் மிகவும் விரும்புகிறேன். மேலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கான சிறந்த திறமையாகவும் அவரை நாங்கள் பார்க்கிறோம்.எங்களுடைய அணி அமைப்பிலும் இந்த சுற்றுப்பயணத்திலும் அவரை சேர்த்துக் கொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.
இதையும் படிங்க : எங்க நியூசி வீரர் இல்லை.. 3 ஃபார்மேட்லயும் இந்த இந்தியர்தான் பெஸ்ட்.. ரொம்ப புத்திசாலி – டிம் சவுதி பாராட்டு
இந்த இளைஞர்கள் சில நேரங்களில் ஊடகங்களில் வரும் கருத்துக்களை படித்தால் அழுத்தம் உருவாகும். அவரை நிலை நிறுத்துவதற்கு அவர் மீது எந்த அழுத்தமும் இல்லை என்று புரிய வைக்க வேண்டியது அவசியமாகும். அவரை நாம் எதற்கும் அவசரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அவருக்கு உதவ வேண்டும் மேலும் அவர் தயார் நிலையில் இருப்பதற்கு நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.