நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வேச்சாளரான டிம் சவுதி மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் நியூசிலாந்து அணிக்காக முக்கிய பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற சியாட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சவுதி 3 ஃபார்மேட்டிலும் இவரைத் தவிர சிறந்த வீரர் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று இந்திய வீரருக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
நியூசிலாந்து அணியின் மூத்த முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழும் டிம் சவுதி 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது 35 வயதான டிம் சவுதி இதுவரை 100 டெஸ்ட், 161 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 126 டி20 போட்டிகளில் விளையாடிய பந்துவீச்சாளராக இருக்கிறார். இதுவரை மொத்தமாக 765 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சியாட் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு சுவாரசியமான கேள்வியில் ஒரு நாள் கிரிக்கெட் வீரருடன் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள விரும்பினால் அது யாராக இருக்கும், ஏன்? என்று கேட்கப்பட்டது. அதற்கு மகேந்திர மகேந்திர சிங் தோனி என்று பதில் அளித்த சவுதி, அவரது வாழ்க்கையை எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்புவதாக கூறுகிறார்.
மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை மூன்று வடிவ ஃபார்மேட்டிலும் சிறந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவரைத் தவிர சிறந்த வீரர் யாரும் தற்போது இருப்பதாக எனக்கு தோன்றவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் காயத்தில் இருந்து மீண்டு வந்து தற்போது சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “முதலில் காயத்திலிருந்து மீண்டும் திரும்பி வருவது என்பது பெரிய விஷயம். ஆனால் பும்ரா முன்பு இருந்ததை விட தற்போது சிறந்த வீரராக இருக்கிறார் . மூன்று வடிவங்களிலும் சிறந்து விளங்குவது என்பது சில நேரங்களில் கடினமான ஒன்றாக இருக்கலாம். மூன்று வடிவங்களிலும் பும்ராவின் சிறந்த பந்துவீச்சை பார்க்கிறோம்.
இதையும் படிங்க:140 வருடம்.. புதிய கிரிக்கெட் வரலாறை எழுதும் இந்தியா இங்கிலாந்து.. லார்ட் மைதானத்தில் அபூர்வ நிகழ்வு
அவர் தற்போது மூன்றிலும் புத்திசாலி கிரிக்கெட்டராக இருக்கிறார். மூன்று வடிவத்திலும் அபாரமாக இருக்கக்கூடிய வீரர் அவரைத்தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை” என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற 2024ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பும்ரா எட்டு போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.