இரண்டாவது டெஸ்டில் சூரியகுமார் இருப்பாரா? – ராகுல் டிராவிட் பதில்!

0
286
Dravid

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை மறுநாள் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்க இருக்கிறது!

நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய டெஸ்ட் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் முதுகு பக்க பிரச்சனையின் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் முதன் முதலாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்!

- Advertisement -

இந்த நிலையில் நேற்று இந்திய அணி தரப்பிலிருந்து ஸ்ரேயாஸ் குணமடைந்து இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இதனால் சூரியகுமார் யாதவ் அணியில் இருப்பாரா என்கின்ற கேள்வி எழுந்தது.

தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ” ஒருவர் காயத்தில் இருந்து மீண்டு வருவது எப்பொழுதும் பெரிய மற்றும் மகிழ்ச்சியான விஷயம். அது அணிக்கானது அல்ல அது அவருக்கானது. ஸ்ரேயாஸ் திரும்பி வந்து பிட்டாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவரது இரண்டு நாட்கள் பயிற்சிக்குப் பிறகு நாங்கள் அவரை அழைத்தோம். இன்று அவர் ஒரு நீண்ட பயிற்சி செஷனை மேற்கொண்டார். நாளையும் அவர் இதை தொடரும் பொழுது நாங்கள் அதை வைத்து மதிப்பீடு செய்வோம். அவர் உடல் தகுதியில் சரியாக இருந்தால், அவர் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டதை வைத்து அவர் நேராக அணிக்குள் வருவார்!” என்று தெரிவித்துள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஸ்ரேயாஸ் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவரது குணாதிசயம்தான் அவரை முன்னிலையில் நிறுத்துகிறது. கான்பூரில் அவரது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து தற்பொழுது பங்களாதேஷ் உடனான ஆட்டம் வரை சில நெருக்கடியான நேரங்களில் நாங்கள் இருந்தபோதெல்லாம் அவர் மிகச் சிறப்பாக வந்து விளையாடி மீட்டுக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒருவரின் கடந்த கால சிறப்பான செயல்பாட்டை வைத்து அவர் நேராக அணிக்குள் வந்து விடுவார் ” என்று சூரிய குமாருக்கு இடம் இல்லை என்பதை ராகுல் டிராவிட் உறுதி செய்திருக்கிறார்!

- Advertisement -