தல தோனி அடுத்த வருடமும் ஐபிஎல் விளையாடுவாரா? – சின்ன தல சுரேஷ் ரெய்னா பதில்!

0
134
Raina

உலகம் தழுவி கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரான்சிஸைஸ் டி20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் தொடர் இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி ஆரம்பித்து மே மாதம் 28ஆம் தேதி நடந்து முடிய இருக்கிறது!

துவங்க இருக்கும் 16 வது ஐபிஎல் சீசனில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்புகிறது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முகமான கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது ஐபிஎல் தொடரில் கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால், சென்னை ரசிகர்களை தாண்டி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் இந்த ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி கடந்த முறை பேசும்பொழுது தன்னுடைய கடைசி ஐபிஎல் தொடரை தங்கள் அணியின் ரசிகர்களுக்கு முன்னால் விளையாடிதான் ஓய்வு பெறுவேன் என்று கூறியிருந்தார். தற்பொழுது இந்த ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி சீசனாக இருக்குமா இல்லை அவர் தொடர்ந்து இன்னொரு சீசன் விளையாடுவாரா என்று, சென்னை அணியின் மிகப்பெரிய வெற்றி வீரரான சுரேஷ் ரெய்னா தனது கணிப்பை தெரிவித்து இருக்கிறார்!

இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது ” அவரால் அடுத்த வருடமும் ஐபிஎல் விளையாட முடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவருக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் அடுத்த ஆண்டு விளையாடுவாரா என்று உங்களுக்கு தெரியாது. அவர் பிட்டாக நன்றாக தற்பொழுது பயிற்சியில் பேட்டிங் செய்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்தே அவர் அடுத்த வருடம் விளையாடுவாரா என்று சொல்ல முடியும். அவரும் அம்பதி ராயிடும் இந்த வருடம் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருக்கிறார்கள். இது அவர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” மகேந்திர சிங் தோனி என்னுடைய அழைப்பை எடுக்கிறார். நான் அவருடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறேன். அவர் கடினமான பயிற்சிகளை செய்து வருகிறார். சிஎஸ்கே சமூக வலைதள பக்கத்தில் அவரது வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெரிய ஷாட்ஸ் விளையாடுகிறார். அவர் சிறப்பாக விளையாடி அந்த அணியை வெற்றி பெற வைப்பார் என்று நான் நம்புகிறேன் என்று கூறி முடித்துக் கொண்டார்!