6,6,6,6.. 20 பந்தில் 50.. பூரன் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.. தென் ஆப்பிரிக்கா அணி தோல்வி.. முதல் டி20

0
398

தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார ஆட்டத்தால் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாய் ஹோப் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய நட்சத்திர வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 174 ரன்கள் இலக்கை மிக சுலபமாக எட்டி வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி விளையாடுகிறது இதன் முதல் டி20 போட்டி இன்று நடைபெற்ற நிலையில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஆறு ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.

அப்போது களமிறங்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்தார். பிறகு இறுதி கட்டத்தில் பேட்ரிக் குரூகர் 32 பந்துகளில் 44 ரன்கள் குவிக்க, தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது.

- Advertisement -

இதில் தொடக்க ஜோடி அதான்சே மற்றும் சாய் ஹோப் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி முதல் விக்கெட்டுக்கு 7.6 ஓவர்களில் 84 ரன்கள் குவித்தனர். அதான்சே 40 ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரான் களமிறங்கினார். தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரன் 20 பந்துகளில் 50 ரன்கள் குவித்து தனது அதிரடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.

அதற்குப் பிறகு குறிப்பாக ஆட்டத்தின் 12 வது ஓவரை நன்ரே பர்கர் வீச, மூன்றாவது பந்தில் இருந்து ஆறாவது பந்து வரை தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு வான வேடிக்கை காண்பித்தார். அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 17.5 ஓவரில் 176 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. தென்னாபிரிக்காவின் பந்துவீச்சில் இளம் வீரரான ஐபிஎல்லில் மும்பை அணியைச் சேர்ந்த மபாகா 3.5 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்

இதையும் படிங்க:10867 ரன்.. 269 போட்டி.. ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் உருக்கமான பேட்டி.. ஐபிஎல் 2025-ல் ஆடுவாரா.?

26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் என 65 ரன்கள் விளாசிய நிக்கோலஸ் பூரன் ஆட்டநாயகன் விருது வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -