நாளை யாருக்கு ஓய்வு? சூரியகுமார் திலக் வர்மாவுக்கு வாய்ப்பா? உலக கோப்பைக்கு முன்னோட்டம்!

0
845
Surya

நடப்பு ஆசியக்கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் தங்களின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேச அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன.

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து, பங்களாதேஷ் அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த காரணத்தினால் நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு முடிவு செய்யும். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும்.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள்.

மேலும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்திருக்கிறார்கள். இதன் காரணமாக யாரும் தொடர்ந்து விளையாட வேண்டிய நெருக்கடியில் இல்லை.

- Advertisement -

எனவே முதலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவரது இடத்தில் முகமது சமி விளையாட வாய்ப்பு அதிகம். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சர்துல் தாக்கூர் அணிக்குள் வரலாம்.

தற்போதைய இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் விளையாடி வருவதால் யாராவது ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அந்த இடத்தில் சூரியகுமார் யாதவ் விளையாடலாம். மேலும் அவர் பந்து வீசவும் பயன்படுத்தப்படலாம்.

அணியின் கேப்டன் என்ற முறையில் ரோகித் சர்மா கட்டாயம் விளையாடுவார் என்று தெரிகிறது. மேலும் கில் மற்றும் விராட் கோலி ஓய்வு எடுக்க விரும்ப மாட்டார்கள் ஆகவே தொடர்ந்து விளையாடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பாக முதுகுப் பகுதியில் மீண்டும் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பயிற்சிக்கு வந்ததாக செய்திகள் வந்தன. ஆனாலும் சூரியகுமார் விளையாடவே வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. எனவே ஸ்ரேயாஸ் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எனவே நாளை பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் இல்லை கே.எல்.ராகுல் என நான்கு வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு அதிகம். அதேபோல் சமி, சர்துல் தாக்கூர், சூரியகுமார், ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புகள் அதிகம்!