“நான் உன்னை முதன் முதலாக இந்திய அணியில் பார்த்த பொழுது..!” – சச்சின் விராட் கோலிக்கு உருக்கமான வாழ்த்து!

0
2520
Virat

இன்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரைஇறுதியில், இந்திய அணி விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சதத்துடன் 397 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறது.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா அதிரடியாக 47 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார். தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்ட கில் 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி அதிரடியாக 163 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50வது சதத்தை அடித்து, அதிக சதங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்திருந்த சச்சினின் சாதனையை முறியடித்தார். மைதானத்திலேயே அவருக்கு மரியாதை செய்யவும் செய்தார்.

இந்திய அணி ஒரு பக்கம் ரன்கள் குவித்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் விராட் கோலியின் சதம் உணர்ச்சிப்பூர்வமான ஒன்றாக மாறியது. இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் 67 பந்துகளில் சதம் விளாசி இருந்தாலும், மொத்த மைதானத்திலும் விராட் கோலியின் சதமே நிறைந்து காணப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சச்சின் கூறுகையில் “நான் உன்னை முதன் முதலில் இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் பார்த்த பொழுது, அணியின் வீரர்கள் உன்னை என்னிடம் ஆசிர்வாதம் வாங்கும்படி பிராங்க் செய்து கொண்டிருந்தார்கள். அன்றைக்கு முழுவதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

ஆனால் வெகு சீக்கிரத்தில் உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் நீங்கள் என் இதயத்தை தொட்டீர்கள். திறமையான விராட் கோலி ஆக நீங்கள் வளர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடிக்கும் பொழுது என்னால் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியாது. அது மட்டும் இல்லாமல் இப்படிப் பெரிய போட்டியில் சிறப்பாக செயல்பட்டு என் சாதனை முறியடிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி. அதுவும் என்னுடைய சொந்த மைதானத்தில் நடந்திருப்பது மிகவும் சிறப்பு!” என்று கூறி இருக்கிறார்!