“மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவலில் இருந்து ரோகித் சர்மா திடீர் விலகல் காரணம் என்ன” – சூரியகுமார் யாதவ் விளக்கம்!

0
365

‌ ஐபிஎல் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதுவரை 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 22 ஆவது போட்டி இன்று மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது .

தற்போது பதினாறாவது ஐபிஎல் சீசன் நடைபெற்று வருகிறது . இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தத் தொடரின் முதலில் ஆடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை பெற்று புள்ளிகளின் பட்டியலில் கடைசி இடத்திலிருந்து மும்பை அணி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 2023 ஆம் ஆண்டிற்கான தனது வெற்றி கணக்கை துவங்கி இருக்கிறது .

- Advertisement -

அந்த வெற்றியை தொடர்ந்து இனி அடுத்தடுத்து வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கையில் ஆட இருக்கிறது மும்பை . ஆனால் அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக மற்றொரு செய்தி வெளியாகியிருக்கிறது . அந்த செய்தியின் படி இன்றைய போட்டியில் ரோகித் சர்மா பாடவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

ரோகித் சர்மாவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்தப் போட்டியில் மும்பை அணிக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருந்து செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் தங்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என தெரிவித்தார் .

மேலும் கேப்டன் ரோகித் சர்மா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில் அவருக்கு வயிற்றில் ஏற்பட்டுள்ள சிறிய தொந்தரவு காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை என தெரிவித்தார் .. முதல் இரண்டு போட்டிகளிலும் பெற்ற தோல்விக்கு பிறகு தற்போது தான் மும்பை அணி தனது வெற்றியை தூங்கி இருக்கிறது இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா வயிற்று வலி காரணமாக அணியில் இருந்து விலகி இருப்பது இன்றைய போட்டியில் பின்னடைவாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

- Advertisement -

மேலும் இன்றைய போட்டியில் நீண்ட நாட்களாக மும்பை அணியின் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர் தனது அறிமுக போட்டியில் களம் இறங்க இருக்கிறார் . சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார் . அன்றிலிருந்து இதுவரை அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அமர வைக்கப்பட்ட நிலையில் இன்று கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அர்ஜுன் டென்டல் கருக்கு களம் இறங்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது