“நாங்க சரியா இல்ல.. இந்த இரவு மோசமானது.. மனசு ரொம்ப வலிக்குது!” – கேப்டன் பேட் கம்மின்ஸ் வேதனை பேச்சு!

0
1374
Cummins

நடப்பு உலகக் கோப்பையின் இரண்டு ஆட்டங்களும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் மோசமான ஒன்றாக அமைந்திருக்கிறது. அவர்கள் இப்படி ஒரு துவக்கத்தை இந்த உலக கோப்பையில் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்திய அணிக்கு எதிராக 199 ரன்களில் ஆஸ்திரேலியா சுருண்டது, அவர்களை தாண்டி பல நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 312 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா, முன்னணி விக்கெட்டுகளை எல்லாம் நூறு ரன்களை எட்டுவதற்கு முன்பாகவே இழந்து, 177 ரன்களுக்கு மீண்டும் சுருண்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த அணியைப் பார்ப்பதற்கு வழக்கமான ஆஸ்திரேலியா அணி போலவே இல்லை. களத்தில் அவர்களிடமிருந்து பெரிய போட்டி வெளிப்படவில்லை. அவர்கள் எந்த முடிவு ஏற்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவே தெரிகிறார்கள்.

பழைய எந்த ஆஸ்திரேலியா அணியை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் களத்தில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். கடைசிப் பந்து வரை அவர்கள் ஆட்டத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். திட்டங்களை மாற்றி கடுமையாக போரிடுவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் அப்படி எதையும் பார்க்க முடியவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும் பொழுது “குயினி மிகச் சிறப்பாக விளையாடினார். அவர்கள் இருந்த இடத்திலிருந்து அவர்களை 310 ரன்களுக்கு எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இந்த இலக்கை எங்களால் துரத்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்.

ஆனால் இந்த இரவில் அது மிகவும் கடினமாக இருந்தது. நாங்கள் சவாலான அணியாக இருக்க வேண்டுமென்றால் சூழ்நிலைக்கு ஏற்ப நாங்கள் சரியாக இருக்க வேண்டும்.

இன்று இரவு பற்றி அதிகம் சொல்ல வேண்டியது கிடையாது. எல்லோருக்கும் மிகவும் மனம் வலிக்கிறது. அடுத்த போட்டிக்கு இங்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. நாங்கள் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. சில விஷயங்களை நாங்கள் ஒழுங்கமைக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!