“நாங்க தப்பு செய்யல.. இந்த இந்திய வீரர்தான் செய்ய வச்சார்!” – ஆஸி இங்லீஷ் பரபரப்பான பேச்சு!

0
4092
Inglis

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இந்தியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இந்திய அணிக்கு கேப்டனாக சூரியகுமார் யாதவும் ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டனாக மேத்யூ வேட் இருக்கிறார்கள். இரு அணிகளிலும் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடரில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. எனவே இன்று திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கும் இரண்டாவது போட்டியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு மூன்றாவது வீரராக களம் இறங்கி 60 பந்துகளில் 110 ரன்கள் குவித்து அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜோஸ் இங்லீஷ் மிரட்டினார்.

ஆனால் அவருடைய சத இன்னிங்ஸை முறியடிக்கும் வகையில் 42 பந்துகளில் 80 ரன்கள் குவித்த சூரிய குமாரின் இன்னிங்ஸ் அமைந்தது. இறுதியாக அவரே ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

சூரியகுமார் குறித்து ஜோஸ் இங்லீஷ் கூறும் பொழுது ” நாங்கள் இத்தனை வைடுகளை வேண்டுமென்றே வீசவில்லை. சூரியகுமார் யாதவுக்கு பந்து வீசுவது மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அவர் கிரீசை சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார். பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அழுத்தத்தை உண்டாக்கினார். நாங்கள் அடுத்த சில ஆட்டங்களில் இதை சரி செய்தே ஆகவேண்டும்.

டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவ் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். உண்மையில் நாங்கள் முதல் ஆட்டத்தில் எங்கு தவறு செய்தோம் என்று கூறுவது கடினம். அந்த போட்டியில் விக்கெட் மிகவும் அழகாக இருந்தது. சூரியகுமார் என்ன செய்வாரோ அதையே செய்தார்.

இவருடன் இசான் கிஷான் இணைந்து வேலை மிக எளிதாக முடிந்து விட்டது. நாங்கள் ஆரம்பத்தில் இன்னும் ஒரு விக்கெட்டை பெற்றிருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கலாம். ஆனாலும் கூட முதல் போட்டி நல்ல கிரிக்கெட் ஆக வெளிப்பட்டது!” என்று கூறியிருக்கிறார்!