“நாங்க ராகுல் டிராவிட்டுக்காக உலக கோப்பையை ஜெயிக்க நினைக்கிறோம்!” – ரோகித் சர்மா உருக்கமான பேச்சு!

0
2592
Rohit

நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில், 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக இரு அணிகளின் கேப்டன்களும் சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி முடித்து இருக்கிறார்கள். இரண்டு தரப்பிலிருந்தும் பல்வேறு கருத்துக்கள் வெளி வந்திருக்கின்றன.

- Advertisement -

ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் கூறும் பொழுது ” லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரு தலை பட்சமாக இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பார்கள். அப்படியான கூட்டத்தை நாளை அமைதியாக்குவதை விட திருப்தியான வேலை வேறு எதுவும் கிடையாது!” என்று சவால் அளிக்கும் விதமாக பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா கம்மின்ஸ் தலைமையின் கீழ் தங்களுடைய பழைய ஆக்ரோஷமான நடவடிக்கைகளை கைவிட்டு இருந்தது. தற்பொழுது மீண்டும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அவர்களுடைய பழைய பாணிக்கு திரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்ட ரோகித் சர்மா உலகக் கோப்பையை எதற்காக வெல்ல வேண்டும் என்கின்ற தங்களது நோக்கத்தை உருக்கமான முறையில் வெளியிட்டார்.

- Advertisement -

இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “ராகுல் டிராவிட் பங்கு மிகவும் முக்கியமானது. அவரிடமிருந்து தெளிவை பெறுகிறோம். அது குறித்து நான் தொடர்ந்து பேசி வருகிறேன். ராகுல் டிராவிட் எப்படி கிரிக்கெட் விளையாடியவர் என்று நமக்கு நன்றாக தெரியும்.

ஆனால் இன்று நாங்கள் அதற்கு மாறுபட்ட முறையிலான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். ஒரு பயிற்சியாளராக அவர் நாங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டை விளையாட எங்களை சுதந்திரமாக அனுமதித்திருக்கிறார். அவர் இல்லாமல் இது நடக்காது.

குறிப்பாக டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தோல்வியின் போது நெருக்கடியான நேரத்தில் வீரர்களுக்கு அவர் மிகவும் ஆதரவாக இருந்தார். நாங்கள் அந்த உலகக் கோப்பையில் நன்றாக விளையாடி அரை இறுதியில் தோற்றோம்.

அவர் சில முக்கியமான சூழ்நிலையில் வீரர்களுக்கு மிகவும் தேவையானதை கொடுத்து மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவர் ஒரு பெரிய சந்தர்ப்பத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார். அவருக்காக நாங்கள் உலக கோப்பையை வெல்ல வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!