வீடியோ: “டிஎன்பிஎல் போட்டியில் அஸ்வின் செய்த கொக்குமாக்குதனம்” ரிவியூ கேட்டு நாட்-அவுட் வந்தமுடிவுக்கு மீண்டும் ரிவியூ கேட்ட அஸ்வின்… அதுவும் நாட்-அவுட்!

0
1661

ரிவ்யூ கேட்டு நாட்-அவுட் என வந்த முடிவுக்கு, மீண்டும் ஒருமுறை ரிவ்யூ கேட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் இணையதளத்தில் கிண்டல் அடிக்கப்பட்டு வருகிறது. கொக்குமாக்குத்தனம் என விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் நடைபெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் திண்டுக்கல் டிராகன் அணி பந்து வீசியது. போட்டியின் 13ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ராஜ்குமார் அஸ்வினின் பந்தை அடிக்க முயற்சித்தபோது கீப்பரிடம் சென்றது. அதற்கு நடுவர் அவுட் என்று கொடுத்தார்.

அவுட் என்று கொடுத்த அடுத்த கணமே அந்த முடிவிற்கு ரிவியூ எடுத்தார் பேட்ஸ்மேன் ராஜ்குமார். மூன்றாவது நடுவர் பரிசோதித்து பார்த்ததில் பந்து பேட்டில் படவில்லை என்று தெளிவாக தெரிந்ததால், களநடுவர் கொடுத்த அவுட் முடிவு திரும்பப் பெறப்பட்டது. நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு சற்று ஆத்திரம் அடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின், மீண்டும் பரிசோதிக்கும்படி தனது பங்கிற்கு ரிவியூ எடுத்தார். மூன்றாவது நடுவர் மீண்டும் ஒருமுறை பரிசோதித்து அவுட் இல்லை என்று ஊர்ஜிதம் செய்தார்.

- Advertisement -

ஒரே பந்திற்கு பேட்டிங் தரப்பு ஒரு முறை, பவுலிங் தரப்பு ஒரு முறை ரிவியூ எடுத்தது இதுவே முதல் முறையாகும். டிஎன்பிஎல் தொடரில் இந்த வினோதம் நடந்திருக்கிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த இந்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் டிரண்டாகி வருகிறது