வீடியோ: ஓடிட்டன்ல.. தோனி மீது கலர்பொடி அடிக்கவந்த வீரர்கள்.. நேக்காக எஸ்கேப் ஆன நம்ம தல..!

0
199

தன் மீது கலர்பொடி அடிக்க வந்த வீரர்களிடமிருந்து சிறப்பாக தப்பித்த தோனியின் வீடியோ பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் இன்று விமரிசையாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் வீராங்கனைகள் பலரும் ஹோலி கொண்டாட்டிய புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியானது.

- Advertisement -

பெண்களுக்கான ஐபிஎல் இம்மாதம் துவக்கத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்திருக்கும் வீராங்கனைகளும், இந்திய அணியின் வீராங்கனைகளுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

வருகிற மார்ச் 31ஆம் தேதி ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் துவங்குகிறது. இதற்காக இந்திய அணியில் விளையாடாத வீரர்கள் தங்களது ஐபிஎல் அணி நிர்வாகத்துடன் இணைந்து பயிற்சியை துவங்கிவிட்டனர்.

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு முன்னுதாரணமாக முதல் ஆளாக சென்னை வந்த மகேந்திர சிங் தோனி, வழக்கம் போல முதல் ஆளாக பயிற்சியையும் சிறப்பாக துவங்கிவிட்டார்.

- Advertisement -

இன்று ஹோலி பண்டிகை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சிஎஸ்கே வீரர்கள் சிலர் தோனி மீது கலர்பொடி பூசுவதற்கு ஓடி வந்தனர். அதிலிருந்து நேர்த்தியாக தப்பித்த தோனி தன் மீது துளியும் கலர்பொடி விழாமல் இடத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோவை சென்னை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வைரலான வீடியோ காட்சியை கீழே காண்போம்.