பொறுமை இழந்த வசீம் ஜாபர்.. வெளிப்படையாகவே ராகுலுக்கு நோஸ் கட்..! முழு விவரம்

0
172

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் வரும் 17ஆம் தேதி டெல்லியில் பலப் பரிட்சை நடத்துகின்றன. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா படுதோல்வியை சந்தித்த நிலையில் இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெறும் உத்வேகத்துடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ராகுலுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ராகுலுக்கு எதிராக போர் கொடி தூக்கிய நிலையில், தற்போது அந்த பட்டியலில் வசீம் ஜாபரும் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்த பதினோரு வீரர்களை களம் இறங்குவது சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி தொடக்க வீரராக அவர் கே எல் ராகுலை நீக்கிவிட்டு, சுப்மன் கில்லை ரோகித் சர்மாவின் ஜோடியாக சேர்த்துள்ளார். நடுவரசையில் புஜாரா, விராட் கோலி ஆகியோரை தேர்வு செய்துள்ள வசீம் ஜாபர், ஐந்தாவது வீரராக சூரிய குமார் யாதவை  நீக்கி விட்டு ஸ்ரேயாஸ் ஐயர் களம் இறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மூன்று சுழற்பந்தவீச்சாளராக அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோரை ஜாபர் தேர்வு செய்துள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளராக சிராஜ் மற்றும் சமியை மீண்டும் சேர்க்க  வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க், ஆல்ரவுண்டர் கேமரான் கிரின் மற்றும் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் திரும்ப வாய் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூவரும் தற்போது டெல்லியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதேபோன்று டேவிட் வார்னர் தொடக்க வீரராக களமிறங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

- Advertisement -