குழந்தை வமிக்காவின் புகைப்படம் எதிர்பாராமல் வெளியானது ; தயவு செய்து இதை செய்யாதீர்கள் – விராட் கோலி வேண்டுகோள்

0
382
Virat Kohli about Vamika Picture

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரில் விளையாடி முடித்து உள்ளது. இந்தத் தொடர் தொடங்கும் முன்பு இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று பலரும் கருத்துகளை கூறி வந்த நிலையில் மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் இந்திய அணி தோல்வி பெற்றுள்ளது. தோல்விக்கு முக்கிய காரணமாக கேப்டன் கேஎல் ராகுலின் அனுபவமின்மை கூறப்படுகிறது. அவர் களத்தில் எடுக்கத் தவறிய மிக முக்கியமான முடிவுகளால் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த தொடருக்கு முன்பு கேப்டன் கோலி வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தபோது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் கேப்டன் பதவியில் நீடிக்க விரும்புவதாக கூறி இருந்தார். ஆனால் இந்த தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்பு இவரின் கேப்டன் பதவி ரோகித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் கோலி இந்த தொடரில் விளையாட விரும்பவில்லை என்று கூட தகவல்கள் வெளியானது. ஆனால் அதெல்லாம் வதந்தி என்று நிரூபிக்கும் வண்ணம் ஆக மூன்று போட்டிகளிலும் கோலி விளையாடினார்.

- Advertisement -

ஆடிய 3 போட்டிகளில் இரண்டு முறை அரைசதம் கடந்து அசத்தினார் கோலி. அதிலும் முக்கியமாக மூன்றாவது போட்டியில் அரைசதம் கடந்த உடனே அதை தன்னுடைய மகளுக்கு அர்ப்பணிக்கும் விதமாக சைகைகள் மூலம் காட்டினார் கோலி. கோலி அனுஷ்கா தம்பதிக்கு கடந்த 2020ம் ஆண்டு தொடக்கத்தில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று வரை குழந்தையின் முகத்தை பத்திரிக்கையாளர்களின் கண்களுக்கு காட்டாமல் இருந்தனர். ஆனால் என்று கூறி அரைசதம் அடித்த உடனேயே கேமராவில் அனுஷ்கா மற்றும் அவரது குழந்தையை படம்பிடித்து திரையில் காட்டினர்.

ரசிகர்கள் இதை வெகுவாக பகிர்ந்து வந்த நிலையில் தற்போது கூறி தன்னுடைய சமூக வலைதளங்களில் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது குழந்தையை கேமரா படம் பிடிக்கிறது என்பதை அறியாமல் இருந்ததாகவும் அதை தயவு கூர்ந்து பகிர வேண்டாம் என்றும் கோலி கூறியுள்ளார். மேலும் தற்போது வரை குழந்தையை பொது வெளியில் காட்ட வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தற்போதும் அந்த நிலைதான் நீடிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். கோலியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் பகிர்ந்த புகைப்படங்களை தற்போது அழித்து வருகின்றனர்.