நேற்று டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் விராட் கோலி எழுந்து நின்று கைத்தட்டும் அளவுக்கு அவரது ஆட்டம் இருந்தது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்புகள் வராமல் இருந்தது. குறிப்பாக விராட் கோலி இடம் இருந்து பெரிய பங்களிப்புகள் ஏதுமில்லை. அது இந்த போட்டியிலும் தொடர்ந்தது. ரன் இல்லாமல் அவர் முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
அதே சமயத்தில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக ரோஹித் சர்மாவின் பேட்டிங் இருந்தது. ஆஸ்திரேலியா அணிக்கு பந்து வீசிய அத்தனை பந்துவீச்சாளர்களையும் எல்லா பக்கத்திலும் அடித்து நொறுக்கினார்.
முதல் இரண்டு ஓவர்களை பொறுமையாக அணுகிய ரோஹித் சர்மா, ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் மூன்று சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்தார். அங்கிருந்து சூடு பிடிக்க ஆரம்பித்த அவருடைய பேட்டிங் கடைசி வரை நிற்கவே இல்லை.
அடுத்து பவர் பிளே முடிந்து ஆடம் ஜாம்பா வர அவருடைய ஓவரிலும் ரோஹித் சர்மாவிடமிருந்து சிக்சர் பறந்தது. சிறப்பாக விளையாடிய அவர் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதமாக இது பதிவானது.
இதையும் படிங்க : 15 வருஷமா ரோகித்த எனக்கு தெரியும்.. இப்பவும் வாய்ப்பு இருக்கு கம் ஆன் பங்களாதேஷ் – மிட்சல் மார்ஸ் பேட்டி
மேலும் ஸ்டோய்னிஸ் பந்துவீச்சில் கிரீசில் இருந்து இறங்கி வந்து ஆப் சைடு எக்ஸ்ட்ரா கவர் திசையில் லோப்டட் ஷாட் மூலம் அழகான சிக்ஸர் ஒன்றை அடித்தார். இதுவரையில் ரோஹித் சர்மா பேட்டிங்க்கு கைத்தட்டி கொண்டிருந்த விராட் கோலி அந்த அழகான ஷாட்டுக்கு எழுந்து நின்று தன்னை அறியாமல் கைத்தட்டினார். அந்த அளவிற்கு ரோஹிlத் சர்மாவின் பேட்டிங் இருந்தது.