கிரிக்கெட் உலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக விளையாடும் ஒரே பேட்ஸ்மேனாக இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மட்டுமே இருந்து வருகிறார். மற்ற சர்வதேச பேட்ஸ்மேன்கள் ஏதாவது இரு வடிவத்தில் மட்டுமே சிறந்தவர்களாக இருக்கிறார்கள். யாருக்கும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இவ்வளவு நீண்ட கால சிறப்பான பங்களிப்பு இல்லை!
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி 25 ஆயிரம் ரண்களைக் கடந்து புதிய உலக சாதனையை படைத்தார். அதாவது 25 ஆயிரம் சர்வதேச ரண்களை குறைந்த இன்னிங்ஸில் 549 இன்னிங்ஸில் கடந்தார். இதன் மூலம் சச்சினின் 577 இன்னிங்ஸ் சாதனையை உடைத்தார்.
இப்படி கிரிக்கெட் உலகில் பேட்ஸ்மேனாக மிக உயரத்தில் விராட் கோலி இருப்பதால் எந்த ஒரு பந்துவீச்சாளருக்கும் அவரது விக்கட்டை கைப்பற்றுவது பெருமைக்குரிய ஒன்றாகவும் கனவாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிஎஸ்எல் டி20 லீக்கில் பெசாவர் சல்மி அணியின் கேப்டன் பாபரிடம் பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் கலகலப்பான ஒரு உரையாடலை மேற்கொண்டார். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த உரையாடலில் அவர் பாபரிடம்
” என்ன நடந்தாலும் பரவாயில்லை நான் உங்களது விக்கட்டை எடுக்க வேண்டும். நீங்களும் விராட் கோலியும் மட்டுமே எனக்கு விதிவிலக்காக இருந்து வருகிறீர்கள். வில்லியம்சன் கூட எனது பந்துவீச்சில் தவறு செய்து ஸ்லீப்பில் இரண்டு முறை தப்பினார். என் மனதில் மூன்று நான்கு பேட்ஸ்மேன்கள் விக்கட்டை கைப்பற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கிறது!” என்று கூறினார்!
இதற்கு பதில் அளித்த பாபர் ” நீங்கள் என்னை முன்பாகவே பயிற்சியின் போது அவுட் செய்திருக்கிறீர்கள. அதை நீங்கள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?” என்று கேட்டார். இதற்கு திருப்பி பதில் அளித்த ஹாரிஸ் ” எனக்கு உங்களது விக்கெட் ஆட்டத்தில் வேண்டும்” என்று கூற அதற்கு மீண்டும் பாபர் “கடவுள் நல்லது செய்கிறார்” என்று சிரித்தபடி முடித்துக் கொண்டார்!
🗣️ Interesting Conversation between Babar Azam & Haris Rauf 🔊#sochnabemanahai #HBLPSL8 #QalandarHum #QalandarsCity #LQvPZ pic.twitter.com/qRpPUtz04J
— Lahore Qalandars (@lahoreqalandars) February 26, 2023