வீடியோ; பாகிஸ்தான் பிஎஸ்எல் லீக்கில் தீப்பிடித்து எரிந்த மைதான மின்விளக்கு கம்பம்; பரபரப்பு!

0
131
PSL

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் உள்நாட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சிசைஸ் டி20 லீக் ஐபிஎல் போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் பிஎஸ்எல் லீக் நடத்தப்பட்டு வருகிறது!

நேற்று இந்த தொடரில் முதல் போட்டி லாகூர் க்லேண்டர்ஸ், முல்தான் சுல்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கடந்த வருட தொடரில் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோத, ஷாகின் அப்ரிடி தலைமையிலான லாகூர் அணியிடம், ரிஸ்வான் தலைமையிலான முல்தான் அணி தோல்வி அடைந்தது!

- Advertisement -

நேற்று இந்த போட்டிக்கான ஆயத்தங்கள் படு வேகமாக நடந்து கொண்டிருக்க திடீரென மைதானத்தில் விளக்குகள் பொருத்தப்பட்ட மின் கம்பத்தில் தீ பிடித்தது. திடீரென்று ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தால் மைதானத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவ ஆரம்பித்தது. இறுதியாக ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு ஏற்பட்ட இந்த குழப்பம் ஓய்ந்து பிரச்சனை சரி செய்யப்பட்டு போட்டி ஆரம்பித்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் விளையாடிய லாகூர் அணிக்கு பகார் ஜமான் 42 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது.

அடுத்த விளையாடிய முல்தான் அணிக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் மிகச் சிறப்பாக 50 பந்துகளில் எட்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 75 ரன்கள் குவிக்க நல்ல ஆரம்பம் கிடைத்தது. ஆனால் பின்பு வந்த வீரர்கள் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இந்த நிலையில் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட நான்கு ரன்கள் வர ஒரு ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக முல்தான் சுல்தான் அணி முதல் தோல்வியை முதல் போட்டியில் தழுவியது!

- Advertisement -