ஏழாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் எட்டாவது போட்டியாக, திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கும், சிசேம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணி எடுத்த முடிவு மிகவும் சரியாகவே அமைந்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 45 ரன்கள் எடுத்தார். சுபோத் பாட்டி நான்கு ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் செய்து 19 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் திண்டுக்கல் அணிக்கு வீழ்த்தினார்.
தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் மூன்று விக்கெட்டுகளை வெகுவேகமாக இழந்துவிட்டது. இந்த நிலையில் களம் இறங்கிய பாபா இந்தரஜித் மிகச் சிறப்பாக விளையாடி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 48 பந்தில் 78 ரன்கள் குவித்து, அணியை மிகப்பெரிய வெற்றியைப் பெற வைத்தார்.
இந்தப் போட்டியில் மூன்றாவது விக்கட்டாக அருண் வெளியேறினார். அவர் வீசப்பட்ட பந்தை ஆப்சைடில் தூக்கி அடிக்க, அந்தப் டீப் பாயிண்ட் மற்றும் டீப் கவர் திசையில் காற்றில் எழும்பி பறந்தது.
இந்த நிலையில் உள்வட்டத்தில் நின்று இருந்த முருகன் அஸ்வின் பந்தை பார்த்தபடி வேகமாக வெளிவட்டத்திற்கு ஓடினார். பந்து அவருக்கு முன்னால் காற்றில் எழும்பி அவருக்கு முன்னால் கீழே இறங்கிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் பந்து கீழே வந்த நொடியில் அபாரமாக டைவ் அடித்த முருகன் அஸ்வின், பந்தை ஆச்சரியப்படும் விதத்தில் காற்றில் பறந்து பிடித்தார். அவருடைய ஃபீல்டிங் செயல்பாடு சர்வதேச தரத்திற்கு இருந்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல்கொண்டு தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடர் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வருகிறது. ஆன்லைனில் பேன்கோட் ஒளிபரப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது!
Welcome to Murugan Ashwin Airlines, this is your captain speaking👨✈️✈️#NammaOoruNammaGethu #TNPL #DD #SMP #DDvsSMP pic.twitter.com/1BJuQzNleM
— Star Sports Tamil (@StarSportsTamil) June 19, 2023