வீடியோ; மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுத அம்பதி ராயுடு ; சிறப்பான பிரியா விடை கொடுக்கும் சென்னை ரசிகர்கள்!

0
4387
Ambati

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டி சில காரணங்களுக்காக உணர்வுபூர்வமானதாக மாறி இருந்தது!

முதல் காரணம் மகேந்திர சிங் தோனி என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. அவரைப் பார்ப்பதற்காகவே சென்னை சேப்பாக்கம் தாண்டி எல்லா மைதானங்களிலும் வேறுபாடு இன்றி ரசிகர்கள் குவிந்தார்கள்!

- Advertisement -

அடுத்து மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வருவதற்காக ஜடேஜா ஆட்டம் இழக்க வேண்டும் என்று சென்னை ரசிகர்களே மைதானத்தில் பதாகை பிடித்த நிகழ்வுகள் அரங்கேறி இருக்க, அதே ஜடேஜா இன்று பவுலிங் பேட்டிங் என்று கலக்கி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இன்னொரு புறம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அன்புடன் அமரேந்திர பாகுபலி என்று அழைக்கும் அம்பதி ராயுடு இந்தப் போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்திருந்தார். இப்படியான காரணங்களால் நேற்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது.

அம்பதி ராயுடுவின் திறமைக்கு அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் மிகவும் குறைவானது. தனது சுயம் தீண்டப்பட்டால் யாராக இருந்தாலும் உடனே கோபப்படும் சுபாவத்தால் அம்பதி ராயுடு நிறைய இழந்து இருக்கிறார்.

- Advertisement -

மிகக்குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படாதது இப்பொழுது வரை அவரை பாதிப்படையை வைக்கும் ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல இழப்புகளைச் சந்தித்த அவருக்கு, நேற்று பிரியாவிடை மிகச் சிறப்பாக கோப்பையுடன் அமைந்தது. அந்த ஆனந்தத்தில் அம்பதி ராயுடு மைதானத்தில் தேம்பித் தேம்பி அழுதார். அது பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாய் அமைந்தது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே…

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அவருக்குச் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகிறார்கள். அவரைப் பல மாதிரி புகழ்ந்தும் பாராட்டியும் அவரை தூக்கி உயரத்தில் வைத்து கொண்டாடுகிறார்கள்.