நாங்க இத மட்டும் செஞ்சிருந்தா இந்திய அணிய முடிச்சிருப்போம்.. ஆனாலும் எனக்கு பெருமைதான் – ஆரோன் ஜோன்ஸ் பேச்சு

0
8793
Jones

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை என்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம் என்கின்ற நிலையில் அமெரிக்க அணி மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணி தோல்வி அடைந்தது. போட்டிக்கு பின் தோல்விக்கான காரணங்கள் குறித்து அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாஸில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்று அமெரிக்க அணிக்கு கேப்டன் மோனன்க் படேல் காயத்தால் விளையாட முடியாதது பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளத்தில் முதல் ஓவரிலேயே அமெரிக்கா இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் 23 பந்தில் 27 ரன்கள், ஸ்டீவன் டைலர் 30 பந்தில் 24 ரன்கள் எடுக்க, அவருக்கு அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்தது.

இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழக்க, இதற்கு அடுத்து சூரியகுமார் ஆட்டம் இழக்காமல் 49 பந்தில் 50 ரன், அவருடன் இணைந்து ஆட்டம் இழக்காமல் விளையாடிய சிவம் துபே 35 பந்தில் 31 ரன்கள் எடுக்க, இந்திய அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி கேள்வி வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

- Advertisement -

தோல்விக்குப் பின் பேசிய அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறும்பொழுது “நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் எடுத்திருந்தால் இந்திய அணிக்கு அது மிக கடினமான இலக்காக மாறி இருக்கும். சில சமயங்களில் போட்டி இப்படித்தான் போகும். எங்களுடைய வீரர்கள் மிகவும் ஒழுக்கமாக களத்தில் விளையாடினார்கள். எங்களுடைய பவுலிங் யூனிட் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் இதைத்தான் அமெரிக்க கிரிக்கெட்டுக்காக செய்ய விரும்பினோம்.

இதையும் படிங்க : இப்பதான் நிம்மதியா இருக்கு.. நான் எதிர்பார்த்ததை அவர் கொடுத்திருக்காரு.. எனக்கு நம்பிக்கை வந்துருச்சு – ரோகித் சர்மா பேட்டி

தற்போது நாங்கள் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்வோம். சில அணி கூட்டங்களை நடத்தி நாங்கள் மீண்டும் வலிமையாக திரும்பி வருவோம். இந்த விக்கெட் கொஞ்சம் ட்ரிக் ஆனது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. இதனால்தான் நாங்கள் ஸ்பின் ஓவர்களை பயன்படுத்தவில்லை. எங்கள் கடைசி ஆட்டத்திற்கு தகுதி பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -