இந்தியா இலங்கை அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது மோதி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது!
இன்று தொடரின் இரண்டாவது போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் இந்த மைதானம் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிகம் வெல்ல உதவி இருக்கிறது!
இலங்கை அணியின் துவக்க ஜோடி பதும் நிசாங்கா மற்றும் குஷால் மெண்டிஸ் முதல் விக்கட்டுக்கு 8.2 ஓவரில் என்பது ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். குஷால் அரை சதம் அடித்து வெளியேறினார். பதும் நிசாங்கா 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து களத்திற்கு வந்த ராஜபக்சே மற்றும் அசலங்கா இருவரையும் உம்ரான் மாலிக் வெளியேற்றி வைத்தார். இதற்கு அடுத்து வந்த ஹசரங்காவை தனது மிரட்டல் வேகப்பந்து வீச்சின் மூலம் கிளீன் போல்ட் செய்து முதல் பந்திலையே வெளியேற்றி அசத்தினார். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி ஒரு புறம் திடீரென சரிந்தாலும் இந்திய அணியுடன் சிறப்பாக ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இலங்கையணியின் கேப்டன் சனகா இந்த ஆட்டத்திலும் பட்டையைக் கிளப்பினார். 22 பந்துகளில் ஆறு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரி உடன் 56 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் காலத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது!
India vs SirLaka to 20 ST UMRAN MALIK W W today cricket India 🏏🏏🏏 pic.twitter.com/1ieIvdNqbH
— Samar Sar (@SamarSar5) January 5, 2023