எங்களுக்கு இந்த இரவு மிகவும் கடினமானது; நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறோமா என்று பார்க்க வேண்டும் – சஞ்சு சாம்சன்!

0
467
Sanju samson

ஐபிஎல் தொடரில் இன்று 9 ஆட்டங்களில் ஐந்து வெற்றியைப் பெற்று இருந்த ராஜஸ்தான் அணி, ஒன்பது ஆட்டங்களில் ஆறு வெற்றிகளை பெற்று இருந்த குஜராத் அணியை தனது சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது!

இந்த போட்டியில் டாசை வென்று முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் பட்லர் விக்கட்டை இழந்தாலும் நன்றாகவே துவங்கியது.

- Advertisement -

ஆனால் பவர் பிளேவில் ரசித் கான் வீசிய கடைசி ஓவரில் ஜெய்ஸ்வால் தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனதும், அதற்கடுத்து மிகச் சிறப்பான டச்சில் தெரிந்த கேப்டன் சஞ்சு சாம்சன் தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கட்டை கொடுத்ததும் பெரிய சரிவாக ராஜஸ்தான் அணிக்கு அமைந்தது.

இதனால் 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரண்களுக்கு சுருண்டது ராஜஸ்தான். ஆனால் குஜராத் அணி கில் விக்கட்டை மட்டும் இழந்து 13.5 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குஜராத் அணிக்கு பிளே ஆப்ஸ் வாய்ப்பை எந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறதோ, அதே அளவுக்கு ராஜஸ்தான் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பை குறைத்து இருக்கிறது.

- Advertisement -

தோல்விக்கு பின் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ” இந்த இரவு எங்களுக்கு மிகவும் கடினமானது. உண்மையில் எங்களிடம் நல்ல பவர் பிளே செயல்பாடு இல்லை. நாங்கள் ஸ்பின்னர்களுக்கு எதிராக போராடினோம். அவர்களின் பந்துவீச்சாளர்கள் நல்ல லைன் மற்றும் லென்த்தில் வந்து வீசினார்கள். மிடில் ஓவர்களில் விக்கட்டை எடுத்தார்கள். இப்படி நிகழும் போது உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

நாங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது பட்டியலை சரி பார்த்து நாங்கள் சரியான கிரிக்கெட்டை விளையாடுகிறோமா என்று பார்க்க வேண்டும். நாங்கள் இதிலிருந்து மீண்டு வர வேண்டும். அடுத்த இரண்டு வாரங்களில் நாங்கள் முன்னோக்கி இருந்து வருகின்ற போட்டிகளை வெல்ல பார்க்கிறோம்!” என்று கூறியிருக்கிறார்!