“சர்பராஸ் கான் மற்றும் ரிங்கு சிங் இந்திய அணியில் எடுக்காததற்கான காரணம் இது தான்” – ரோகித் சர்மா விளக்கம்!

0
1535

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் டோமினிக்கா தீவுகளில் இன்று தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தோல்வியை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது . இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ருத்ராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

- Advertisement -

தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சர்பராஸ் கானுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் உள்ளிட்ட வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் அஜித் அகர்க்கர் தேர்வு குழு தலைவராக பொறுப்பேற்ற பின் தேர்வு செய்யப்பட்ட டி20 அணியில் இடம் பெறவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இந்த ஐபிஎல் சீசனில் மிகச் சிறப்பாக விளையாடியவர் ஒரே ஓவரில் 31 ரன்களை எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் அவர் டி20 அணியில் இடம் பெறாதது பலருக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது . இது தொடர்பாக தேர்வு குழுவினரையும் இந்திய அணியையும் முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சிகர்களும் கடும் விமர்சனங்களை முன் வைத்து பேசி வருகின்றனர் .

முதல் டெஸ்ட் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை தெரிவித்திருக்கிறார் . முதலில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இளம் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த அவர் இந்திய அணியின் தேர்வு பற்றி பேசினார் . மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் இந்தியா அணிக்காக அறிமுகமாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் ரோஹித் சர்மா .

- Advertisement -

மேலும் அணி தேர்வு பற்றி பேசியிருக்கும் அவர் ஜெய் ஸ்வால் மற்றும் ருத்ராஜ் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கின்றனர் . இது அவர்களது தொடர்ச்சியான கடின உழைப்பிற்கு கிடைத்து வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார் . மேலும் ரிங்கு சிங் மற்றும் சர்பராஸ் கான் அணியில் இடம்பெறாதது பற்றி பேசிய அவர் ஒரு அணியில் 15 முதல் 16 வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும். எல்லா வீரர்களுக்கும் அவர்களுக்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை .ரிங்கு சிங் மற்றும் சர்ப்ரைஸ் கான் ஆகியோரும் அவர்களுக்கான நேரம் வரும் போது நிச்சயம் இந்திய அணியில் விளையாடுவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.