அஷ்வினின் பெரிய சிரிப்புக்கு இதுதான் காரணம் – சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து!

0
480
Ashwin

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தற்பொழுது இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது!

இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றால் தொடரை சமன் செய்யும். இந்திய அணி வென்றால் தொடரை வெல்வதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்கின்ற நிலை இருக்கிறது!

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் இந்திய ஆடுகளங்கள் குறித்து மிகப்பெரிய சர்ச்சைகள் எழுந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் தரப்பட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்திருக்கிறது. உஸ்மான் கவாஜா 180 ரன்கள் எடுத்து அசத்தியிருக்கிறார். இப்படியான ஆடுகளத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 47.2 ஓவர்கள் பந்து வீசி ஆறு விக்கட்டுகளை வீழ்த்தியதோடு 91 ரன்கள் மட்டுமே தந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ” இந்த ஆடுகளத்தில் எவ்வளவு மெதுவாக பந்து வீசுகிறீர்களோ அந்த அளவிற்கு சிறப்பானது என்பதை அவர் இறுதியாகக் கண்டுபிடித்தார். அவர் பல ஐந்து விக்கட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் தட்டையான பேட்டிங் செய்ய சாதகமான இந்த ஆடுகளத்தில் முதல் மற்றும் இரண்டாவது நாளில் தற்பொழுது ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். கேமரூன் கிரீனைத் தவிர மற்ற எல்லா விக்கட்டுகளையும் தனது சிறப்பான பந்தின் மூலம் வீழ்த்தினார்” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “ஆடுகளம் அவருக்கு உதவவில்லை. இந்தத் தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவிகள் கிடைத்தது ஆனால் இந்த போட்டியில் அப்படி இல்லை. இருந்தபோதிலும் அவர் ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார். இது அஸ்வினுக்கு முக்கியமான செயல் திறன். அதனால்தான் அவர் மிகவும் சிரித்தார்!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் கூறும்பொழுது ” அவர் இது போன்ற நீண்ட ஸ்பெல்களை வீசியிருக்கிறார். ஆனால் அப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று விக்கெட்டுகளை பெற்றார் இப்பொழுது ஆறு விக்கட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவர் தனது புத்திசாலித்தனத்தால் பேட்ஸ்மேன்களை ஏமாற்றியது சிறப்பானது. அவரது 32 ஐந்து விக்கெட் எடுத்ததில் இந்த முறை செய்ததை அதிகமாக மதிப்பிடுவார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நிலைமைகள் முற்றிலுமாக பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்!