“இது எங்க மண்ணு.. இங்க இந்தியாவை இவர் மட்டும்தான் ஜெயிக்க வைக்க முடியும்!” – காலிஸ் அதிரடி!

0
653
Kallis

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடருக்குப் பிறகு கடைசியாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடர் சோதனையாகவே அமைந்து வருகிறது.

இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர்களை விளையாடி உள்ள இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றது இல்லை. இந்திய அணியிடம் திறமையான பவுலர்கள் உள்ளனர். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்கும் அளவிற்கு திறமையான பேட்ஸ்மேன்கள் இல்லை.

- Advertisement -

அதற்குக் காரணம் பேட்ஸ்மேன்கள் பழக்கப்படாத சீதோஷ்ண நிலை. மேலும் தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் சாதாரணமாகவே பந்து அதிகம் பவுன்ஸ் எகிரும் தன்மை கொண்டது.
ஆடுகளம் அதிகம் புற்கள் நிறைந்து காணப்படும். இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. பெரும்பாலும் சுழற் பந்துவீச்சை ஆடிப்பழகிய இந்திய பேட்ஸ்மன்களுக்கு சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தங்களைத் தகவமைத்துக்கொள்ள முடியாததே தோல்விக்கு காரணமாக இருக்கலாம்.

எனவே இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்றால் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு அணிக்கு பெரிதும் தேவை. ஏற்கனவே விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். எனவே அவர்களுக்கு ஆடுகளம் பற்றிய புரிதல் நன்றாக இருக்கும். இது இளம் வீரர்களுக்கு எடுத்துரைக்க உதவியாகவும் இருக்கும்.

தென் ஆப்பிரிக்கா அணியின் லெஜன்ட் ஜாக்காலிஸ் இந்திய- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது
” இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெல்லவில்லை. அந்த வரலாறு இன்னமும் தொடர்கிறது.

- Advertisement -

தற்போது இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால் அதற்கு விராட் கோலி முக்கிய காரணமாக இருப்பார். மேலும் அணியின் சக வீரர்களுக்கு அவர் தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும். அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அவர் ஒரு பெரிய தொடரை விளையாட விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். இந்திய அணி வெற்றி பெற வேண்டுமானால் அவரின் பங்களிப்பு அணிக்கு பெரிதும் தேவை” என்று கூறுகிறார்.

விராட் கோலியின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மிகச் சிறந்த நிலையில் உள்ளது. இவர் சமீபத்தில் நடந்த உலக கோப்பையில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 765 ரன்கள் குவித்துள்ளார். உலகக்கோப்பியில் ஒரு வீரர் குவித்த அதிகபட்ச ரன் இதுவே ஆகும்.எனவே அவர் இந்தத் தொடரிலும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுவார் என்று நம்பலாம்.