” இந்தியாவை தோற்கடிக்க ஒரே வழிதான் இருக்கு.. இதை செய்யுங்க!” – ஆடம் கில்கிறிஸ்ட் தரும் ஐடியா!

0
37663
ICT

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் திறமை வெளிப்பாடு உச்சத்தில் இருக்கிறது.

இந்திய அணியில் மிகக் குறிப்பாக பந்துவீச்சுப் படை மிகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணியை மற்ற அணிகளை விட வித்தியாசப்படுத்தும் காரணியாக பந்துவீச்சு அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் இடம்பெறக்கூடிய ஐந்து பந்துவீச்சாளர்களுமே உலகத்தரமான பந்துவீச்சாளர்களாக இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு பழக்கப்பட்ட சூழ்நிலையில் விளையாடுவதோடு, ஆடுகள சூழ்நிலை எப்படி இருந்தாலும் அதற்கேற்றவாறு உடனுக்குடன் மாறுகிறார்கள். இதனால் சேதாரங்கள் குறைக்கப்பட்டு, எதிரணியை கட்டுப்படுத்த முடிகிறது.

தற்பொழுது இந்திய அணியை வெல்வதற்கு கடினம் என்று பலராலும் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியை வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்பொழுது “டாஸ் வென்றால் எதிரணிகள் இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய அணி இதுவரை எப்படி சென்று இருக்கிறது என்று பார்க்கிறேன். அவர்களுக்கு இலக்கைத் துரத்துவதில் பலவீனம் என்று நான் சொல்லவில்லை. ஏனென்றால் அங்கு இலக்கைத் துரத்துவதில் சிறந்த விராட் கோலி இருக்கிறார்.

- Advertisement -

அவர்கள் இரண்டாம் பகுதியில் விளக்குகளின் கீழ் பந்து வீசும் போது மிக அபாயமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாட கடினமாக இருக்கிறது. அதே சமயத்தில் அவர்களை சமாளிக்க பகலில் விளையாடுவது கொஞ்சம் சுலபம்.

இந்திய அணியின் அருமையான வேகப்பந்து வீச்சு மிகச் சரியான இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இணைந்து இருக்கிறது. இதனால் அவர்கள் சமநிலைக்கொண்ட பந்துவீச்சை வைத்திருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து பார்த்தால் பெஞ்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். மேலும் அவர்களிடம் பலமான பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனாலும் கூட அவர்களின் பந்துவீச்சு வீரியம் தான் எல்லோரையும் அச்சுறுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!