“தோனி மாதிரி ஒரு ஆள் இருக்காரு.. நீங்க தான் யூஸ் பண்ணனும்!” – சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு ஸ்பெஷல் அட்வைஸ்!

0
5266
Raina

தற்பொழுது இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முதல் முறையாக முழுமையாக நடைபெற இருக்கிறது.

13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சந்தித்து விளையாடி வருகிறது. நேற்று நியூசிலாந்து போலவே இன்று நெதர்லாந்து எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாகவே செயல்படுகிறது.

இந்திய அணி நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கொஞ்சம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணியில் யார் இடம்பெறுவார்கள்? என்பது குறித்து சுவாரசியமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தற்போது இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சிறந்த பார்மில் இருக்கிறார்கள். மேலும் வாய்ப்பு பெற்ற பந்துவீச்சாளர்களும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக அணியில் யாருக்கு வாய்ப்பு தருவது? என்கின்ற நல்ல குழப்பம் நிலவி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ” இந்த உலகக் கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை நான் முன்னணியில் வைக்கிறேன்.

உலகக் கோப்பை மொத்தம் 10 மைதானங்களில் 45 நாட்கள் நடைபெறும். போட்டி நடைபெறும் இந்த காலகட்டத்தில் வேகப் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திப்பார்கள். எனவே நான் ஒரு ஆசிய துணை கண்ட அணியையும் கொண்டு வருகிறேன்.

சுப்மன் கில் இந்தியாவின் வலிமையான வீரராக இருப்பார். அவர் அனுபவ வீரர்களான ரோஹித் மற்றும் விராட் கோலி உடன் இணைந்து விளையாடுகிறார். ரோஹித் மற்றும் கில் இருவரும் சச்சின் கங்குலி போல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வெல்வார்கள்.

இந்திய அணிக்கு டெத் ஓவர்களில் மகேந்திர சிங் தோனியை தவிர ஒருவர் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால் அது சூரியகுமார் யாதவ் மட்டும்தான்!” என்று கூறியிருக்கிறார்!